அதிர்ச்சியில் கல்வியுலகம்
சென்னை, பிப். 9- “எந்த ஒரு ஒன்றிய அரசும், அர சியல் பழிவாங்கலுக்கு கல்வி வாய்ப்பை நெரிக்கும் அளவுக்கு கொடூரமாக இருந்தது இல்லை” - முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வார்த்தைகள் நெஞ்சைப் பிளக் கின்றன. தமிழக மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை நசுக்கும் வகையில், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை குஜராத், உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு மோடி அரசு மாற்றியிருப்பது வேதனையையும் கொதிப்பையும் ஏற்படுத்தும் செயல்.
வஞ்சனையின் உச்சகட்டம்!
தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான பி.எம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணைய மறுத்ததற்கான பழிவாங்கலா இது? மும்மொழிக் கொள்கையை எதிர்த்ததற்கான தண்டனையா? தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அடகு வைக்கும் ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் இந்த செயல், ஜனநாயகத்தின் அடிப்படை நெறிமுறைகளையே கேள்விக் குள்ளாக்குகிறது. “உரிமைக்காக போராடும் நமது மாணவர்களுக்கான தண்டனையே தவிர வேறு ஒன்றும் இல்லை” என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேதனையுடன் குறிப்பிடுகிறார். தமிழ கம் மற்றும் அதன் மக்கள் மீதான இந்த அநீதி, வெறுப்பின் வெளிப்பாடு என்பதை விட வேறென்ன? “வஞ்சக மனப்பான்மையுடன் செயல்படும் ஒன்றிய பாசிச அரசை மாணவர்களும், ஆசிரியர்களும் மன்னிக்க மாட்டார்கள்” என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் கண்டனக் குரல் ஒலிக்கிறது. - ஆசிரியர்களின் ஊதியம் பாதிப்பு; பள்ளிகளின் வளர்ச்சித் திட்டங்கள் முடக்கம்; மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிப்பு; மாநில சுயாட்சி மீதான தாக்குதல் - என மோடி அரசின் செயல் ஏற்படுத்தும் பாதகங்கள் கடுமையானது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. “கல்வி விடுதலை ஒன்றே நமது மாநிலத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு தீர்வு தரும்” என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமது பேட்டியில் உறுதிபட தெரிவிக்கிறார்.
இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்
இந்நிலையில், நமது மாண வர்களின் எதிர்காலத்தை அழிக்கும் இந்த கொடூர செயலுக்கு எதிராக தமிழ கம் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரம் இது. கல்வி என்பது வணிக மல்ல, அது மாணவர்களின் அடிப்படை உரிமை. அந்த உரிமையை பறிக்கும் எந்த முயற்சியையும் தமிழகம் ஒரு போதும் ஏற்காது என்று, இந்திய மாண வர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.