tamilnadu

img

தூத்துக்குடி மாவட்டத்தில் 199 சந்தா வழங்கல்

தூத்துக்குடி, ஜுலை 15- தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று மையங்களில் 199 தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜுலை 14 அன்று நடைபெற்றது.  தூத்துக்குடி மாவட்ட குழு அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரனிடம் தீக்கதிர் சந்தா வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ரசல், கு.ரவீந்திரன், ஆர்.பேச்சிமுத்து, த.சண்முகராஜ், பா.புவி ராஜ், மாநகர் செயலாளர் எம்.எஸ்.முத்து, ஒன்றிய செயலாளர் கே.சங்கரன், புறநகர் செயலாளர் முனியசாமி, திருவைகுண்டம் நம்பி ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்விற்கு திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் பெ.முத்துக்குமார் தலைமை வகித்தார். தீக்கதிர் சந்தாக்களை மத்திய கமிட்டி உறுப்பினர் பி.சம்பத் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் மாநிலக் குழு உறுப்பினர் பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ச்சுணன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், உடன்குடி  கந்தசாமி, கருங்குளம் ஜேசுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் கோவில்பட்டி கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கே. பி.ஆறுமுகம் தலைமையில் தீக்கதிர் பொது மேலாளர் என்.பாண்டியிடம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சீனிவாசன், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், கயத்தாறு சாலமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.