திருவனந்தபுரம், மே 21- தினசரி உபயோகப் பொருட்களின் விலை உயர்வை கேரள அரசு கட்டுப் படுத்தியுள்ளது. பொதுச் சந்தை யில் ரூ.1376 விலையுள்ள 13 அத்தியா வசியப் பொருள்கள் சப்ளைகோ மூலம் ரூ.612க்கு விற்பனை செய்யப் படுகிறது. ஏழு ஆண்டுகளாக அவற்றின் விலையை உயர்த்தவில்லை. மாநி லத்தில் 50 லட்சம் ரேசன் அட்டைதா ரர்கள் இவற்றை வாங்குகின்றனர். சப்ளைகோ தனது விற்பனை நிலை யங்கள் மூலம் ஆண்டுக்கு 89,168 டன் அரிசியை மானிய விலையில் விற்பனை செய்கிறது. இது தவிர 32 பொருட்களுக்கு மானியம் வழங் கப்படுகிறது. மாநிலத்தில் 817 மாவேலி கடைகள் உள்ளன. இங்கு 30-50 சத விகிதம் விலை குறைவாக கிடைக்கி றது. கன்ஸ்யூமர்ஃபெட் உடன் இணைந்து 1000 நீதி கடைகளும் உள்ளன. 176 திரிவேணி பல்பொருள் அங்காடிகள் மற்றும் 47 நடமாடும் திரிவேணி கடைகள் கேரளத்தில் உள்ளன.