காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கூடாது
பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, ஏப்.26- மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க 38ஆவது ஆண்டு கிளை மாநாடு திருச்சியில் சனிக் கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு செய லாளர் முத்துக்குமரன் தலை மை தாங்கினார். மண்டல பொதுச் செயலாளர் பாண்டி யராஜன் துவக்கவுரை ஆற்றினார். கிளைச் செயலா ளர் ரவிச்சந்திரன் அறிக்கை சமர்ப்பித்தார். தென்மண்டல துணை தலைவர் பாலசுப்ர மணியன் சிறப்புரை ஆற்றி னார். மண்டல குழுவின் உறுப்பினர் ராஜ மகேந்தி ரன், பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியோர் சங்கத் துணைத் தலைவர் மணி வேல், பொது காப்பீட்டு அதி காரிகள் சங்கத் தலைவர் புவ னேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து மாநாட்டில், தேச வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வரும் பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவ னங்களான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நியூஇந்தியா அஷ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் ஆகிய 4 நிறுவனங்களையும் உடனடியாக ஒன்றிணைக்க வேண்டும். தனியார்மய முயற்சிகளை கைவிட வே ண்டும். பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அதிகாரி கள், வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைத்து பிரிவுகளிலும் பல்லாயிரக்கணக்கில் காலி யாக உள்ள பணி இடங்க ளை உரிய முறையில் உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. முன்னதாக, இணைச் செயலாளர் ஶ்ரீவித்யா வர வேற்றார். மண்டலக் குழு உறுப்பினர் காந்தி நன்றி கூறினார்.