tamilnadu

img

விஷச் சாராய உயிரிழப்பு ரூ.10லட்சம் இழப்பீடு அதிகமாம்; சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை, ஜூலை 5- கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியான நிலையில், அவர்களின் குடும்பப் பாதுகாப்புக்காக தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தது. இவை தவிர, தாய் - தந்தையை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு, அவர் களின் வாழ்வாதாரம், கல்வி வாய்ப்பு ஆகி யவற்றை உறுதிப்படுத்தவும் தனியாக சிறப்புத் திட்டங்களை முதல்வர் அறி வித்தார். ஆனால், அரசின் இந்த முடிவை எதிர்த்து  சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.  அந்த மனுவில், “கள்ளச்சாராயம் குடிப்பது சட்டவிரோத செயல் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர் களை பாதிக்கப்பட்டவர்களாக கருதக் கூடாது. தீ விபத்து உள்ளிட்ட விபத்துக் களில் பலியானோருக்கு குறைந்த இழப்பீடு வழங்கும் நிலையில், விஷச் சாராயம் குடித்து பலியானவர்களுக்கு எந்த அடிப்படையில் அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது? என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை. விஷச் சாராயம் குடித்து உயிரிழந்த வர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள், சமூக சேவகர்கள், சமூகத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் அல்ல என்பதால், அவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என அவர் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில், வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, “விஷச் சாராயம் குடித்து மரணமடைந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகம்” என வும், “இவ்வளவு அதிக தொகையை எந்த அடிப்படையில் வழங்க முடியும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  மேலும், இந்த தொகையை மறுபரி சீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி அரசுத்  தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங் களுக்கு தள்ளி வைத்தனர்.