பள்ளிபாளையம், ஜன. 4 - பள்ளிபாளையத்தில் தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சிறப்பு மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செய லாளர் விஜூகிருஷ்ணன் ஊடக சந்திப்பில் பேசுகையில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35 ஆவது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த டிசம்பர் 13 முதல் 16 வரை நடைபெற்று முடிந்துள்ளது. இதில், ஒன்றிய அரசு தொடர்ந்து விவசாய விரோத, மக்கள் விரோதப் போக்குடன் நடந்துகொள்வதை கண்டித்து, மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொழிலாளர்களும், விவசாய தொழி லாளர்களும் லட்சக்கணக்கில் பங்கேற்கிற பேரணி தில்லி நாடாளுமன்ற வீதியில் ஏப்ரல் 5 ஆம்தேதி நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.
2014-இல் இருந்து 2022 வரைக்கும் நரேந்திர மோடியும், பாஜக அரசும் ஏராள மான வாக்குறுதிகள் அளித்தனர். இதில், எதனையும் மோடி அரசு நிறைவேற்ற வில்லை. தற்போது விவசாயிகளின் நெருக்கடி அதிகமாகி இந்த 8 வருடத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதே 8 வரு டங்களில், பல்லாயிரக்கணக்கான தொழி லாளிகள், தினக்கூலி தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த வருடத்தில் தில்லியில் விவசாயிகள் போராட்டம், ஒரு வருடத்தை கடந்தும் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில், 738 விவசாயிகள் இறந்தனர். இந்த போராட்டம் வீரியமாக நடைபெற்றதால் ஒன்றிய மோடி அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாகக் கூறி கோரிக்கைகளுக்கு பணிந்தது. ஆனால், அன்று வாக்குறுதி கொடுத்த மோடி அரசு இன்று வரை அதை நிறைவேற்றவில்லை. குறைந்தபட்ச ஆதார விலைச் சட்டம், விவசாய சீர்திருத்த மசோதாவில் மாற்றம் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தார். அது எதையும் நடைமுறைப்படுத்தவில்லை. லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில் ஒன்றிய அரசில் உயரிய பொறுப்பில் இருக்கும் ஒரு அமைச்சரின் மகன் விவசாயிகள் பேர ணிக்குள் புகுந்து 5 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளரை வாகனத்தை ஏற்றி கொலை செய்தார். அதற்கு இதுவரை யிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதற்கு எதிராக வலுவான போராட்டம் விரைவில் நடத்த உள்ளோம்.
ஒவ்வொரு முறையும் ஒன்றிய பட்ஜெட் விவசாயிகளுக்கான பட்ஜெட்டாக அது இருப்பதில்லை. கார்ப்பரேட் நிறுவனங் களுக்கான பட்ஜெட்டாக இருக்கிறது. ஆகவே, மோடி அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஏப்ரல் 5 ஆம்தேதி பத்து லட்சம் விவசாயி கள், தொழிலாளர்கள் பங்கேற்கிற பேரணி யும், இதேபோன்று ஜனவரி 26- ஆம் தேதி, சம்யுக்த கிஷான் மோர்ச்சாவின் முடிவின் அடிப்படையில் விவசாயிகளும், விவ சாயத் தொழிலாளர்களும் பங்கேற்கிற டிராக்டர் பேரணி அனைத்து மாநிலங்களி லும் நடைபெற உள்ளது. இதில், விவ சாயிகள் பெரும் திரளாக பங்கேற்க உள்ள னர். மேலும், ஹரியானாவிலும், வட இந்தி யாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களி லும் உள்ள விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டி ஒரு மகா பஞ்சாயத்து போராட்டம் நடைபெற உள்ளது. இந்த இரண்டு முடி வுகள் விவசாயிகள் சங்கத்தின் 35 ஆவது அகில இந்திய மாநாட்டில் எடுக்கப் பட்டுள்ளது என்றார்.