tamilnadu

img

நிதி ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் கேரள பட்ஜெட்

திருவனந்தபுரம், பிப்.8- 2025-26ஆம் நிதியாண்டுக்கான கேரளம் மாநில பட்ஜெட்வெள்ளிக் கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்  டது. கேரள மாநில நிதியமைச் சர் கே.என்.பாலகோபால் தாக்கல்  செய்த இந்த பட்ஜெட்டில் உள்கட்ட மைப்பு மற்றும் நகர்ப்புற திட்டங்க ளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்  டுள்ளது. குறிப்பாக இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஐடி துறைக்கும், போக்கு வரத்துக்கும் அதிகளவில் நிதி ஒதுக்  கீடு செய்யப்பட்டுள்ளது.  அத்துடன் மாநிலத்தின் எதிர்  காலத்திற்கான துணிச்சலான மற்றும்  விரிவான பார்வையை வெளிப்படுத்து கிறது. இந்த பட்ஜெட் முற் போக்கு வளர்ச்சி, சமூக நீதி மற்றும் சுற்றுச்  சூழல் பொறுப்புணர்வை இணைக் கும் ஒரு வரைபடம் ஆகும். நகரமய மாக்கல், காலநிலை மாற்றம் மற்றும்  மாறிவரும் மக்கள்தொகை சிக்கல்  களை தொடர்ந்து எதிர்கொள்ளும் நிலையில், செழிப்பு பகிரப்படுவதை யும், யாரும் விடுபடாமல் இருப்பதை யும் உறுதிசெய்யும் தெளிவான பாதை யை இந்த பட்ஜெட் வழங்குகிறது.

நிதி ஆரோக்கியத்தை வலுப்படுத்துதல்

2025-26 கேரள பட்ஜெட்டின் மிக வும் நம்பிக்கையளிக்கும் அம்சங்க ளில் ஒன்று மாநிலத்தின் நிதி ஆரோ க்கியத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத் தக்க முன்னேற்றம். கேரளம் தனது வருவாய் பற்றாக்குறையை 2021-22இல் 2.25% இலிருந்து 2023-24இல்  1.58% ஆகக் குறைத்துள்ளது. மேலும் அதன் நிதிப் பற்றாக்குறையும் 4.04% இலிருந்து 2.9% ஆகக் குறைந்துள்ளது. அதே போன்று கூடுதல் வளங்களை திரட்டும்  நோக்கில் பட்ஜெட் பல்வேறு நடவடிக்கைக ளை அறிமுகப்படுத்துகிறது. நீதிமன்றக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டு ரூ.150 கோடி கூடுதல் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது. நில வரி சீரமைப்புகள் மூலம் ரூ.100 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சிறு வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு நிவார ணம் அளிக்கும் வகையில் ஜிஎஸ்டி நிலுவை களுக்கான மன்னிப்புத் திட்டமும் அறிவிக்கப் பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு மேம்பாடு : கேரளாவின் எதிர்காலத்திற்கான அடித்தளம்

சாலை மற்றும் பாலப் பணிகளுக்காக மொத்தம் ரூ.3,061 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு மெட்ரோ திட்டங்கள் மற்றும் விழிஞ்ஞம் துறைமுக மேம்பாடு ஆகியவை மாநிலத்தின் உள்கட்டமைப்பை மறுவடிவமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கழிவு மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத் திட்டங்க ளுக்காக ரூ.1,986 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொச்சி நிலையான நகர்ப்புற மறுசீரமைப்புத் திட்டம் நகரங்களை நிலையான, சுற்றுச்சூழல் நட்பு இடங்களாக மாற்றும் என உறுதியளிக்கி றது. டிஜிட்டல் உள்கட்டமைப்பில், கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க் (கேபோன்)  மேம்பாட்டிற்கு ரூ.100 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.

மக்கள் மைய அணுகுமுறை:  சமூக நலனின் மையம்

கேரள பட்ஜெட்டில் வீட்டுவசதி முன்னுரிமை பெறுகிறது. லைப் மிஷன் திட்டம் குறிப்பி டத்தக்க வெற்றி பெற்றுள்ளது. 4.27 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 1.11 லட்சம் வீடுகள் கட்டுமானத்தில் உள்ளன. மேலும் 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.1,160 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. சுகாதாரத்திற்கு ரூ.10,431 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது, அதில் காருண்யா ஆரோக்ய சுரக்ஷா பத்ததி (KASP) திட்டத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டு களில் மட்டும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்க ளுக்கு ரூ.6,788 கோடி மதிப்பிலான இலவச சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்துறை புத்தாக்கம்

தொழில்நுட்பத் துறையில், கண்ணூர் மற்றும் கொல்லத்தில் புதிய ஐடி பார்க்குகள் மற்றும் வழித்தடங்களை உருவாக்க ரூ.517 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் ஜிபியு கிளஸ்டருக்கு ரூ.10 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) மற்றும் ஸ்டார்ட்-அப்களுக்கு தொழில்துறை மேம்பாட்டிற்காக ரூ.1,831 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. முதலமைச்சரின் தொழில்முனை வோர் மேம்பாட்டுத் திட்டம் ஆண்டுதோறும் 500 சிறு நிறுவனங்களை ஊக்குவிக்க இலக்கு நிர்ண யித்துள்ளது.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மை: பசுமை எதிர்காலத்திற்கான பாதை

கேரளாவின் வளங்களைப் பயன் படுத்தும் முன்னோடித் திட்டமான கிரீன் ஹைட்ர ஜன் வேலி திட்டத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. சூரிய மின் திட்டங்கள் மற்றும் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்ஸ் (BESS) விரிவாக்கம் கேரளாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அதிகரிக்கும் முயற்சியை எடுத்துக்காட்டுகிறது.

வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி

உயர்மதிப்பு தோட்டக்கலை மையமாக கேர ளாவை மாற்றுவதற்கு ரூ.30 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. மீன்பிடித் துறைமுகங்களின் சீரமைப்பு மற்றும் கண்ணூரில் உலகளாவிய பால் கிராமம் அமைப்பதற்கு ரூ.295 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக சமூகங்களை மேம்படுத்தவும், பொருளாதார வாய்ப்புகள் மாநிலத்தின் அனைத்து மூலைக ளையும் சென்றடைவதை உறுதிசெய்யவும் இந்த முதலீடுகள் இலக்கு கொண்டுள்ள

சமத்துவத்தை உறுதி செய்தல்

சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் நலனுக்கு முறையே ரூ.105 கோடி மற்றும் ரூ.706 கோடி அவர்களின் சமூக பாதுகாப்பு திட்டங்க ளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடிகள் மற்றும் ஒன்றிய அரசின் ஒத்துழைப்பின்மை கேரள மாநிலத்தின் முற்போக்கான பட்ஜெட் பார்வை இருந்த போதிலும், ஒன்றிய அரசின் அணுகுமுறை கடும் சவால்களை ஏற்படுத்து கிறது. ஒன்றிய அரசு கேரளாவிற்கான நிதி ஒதுக்கீ டுகளை குறிப்பிடத்தக்க அளவு குறைத்துள்ளது. மாநிலத்தின் கடன் வாங்கும் வரம்புகளில் கடு மையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதி நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. ஒன்றிய அரசின் திட்டங்க ளுக்கான நிதி வெளியீட்டில் தாமதம் ஏற்படுகி றது. வளர்ச்சித் திட்டங்களுக்கான கூடுதல் நிதி கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. இந்த நிதி நெருக்கடிகளை சமாளிக்க கேரள  அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளது.  மாநிலத்தின் சொந்த வரி வருவாயை அதி கரிக்க புதிய முயற்சிகள், செலவினங்களை கட்டுப்படுத்தி திறமையான நிதி மேலாண்மை, நிதி உரிமைகளுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது,  மாற்று நிதி ஆதாரங்களை கண்டறியும் முயற்சிகள், நிதி கட்டுப்பாடுகள் மற்றும் செயல் படுத்தல் சவால்கள் இருந்தபோதிலும் நெகிழ் திறன், சமத்துவம் மற்றும் நிலையான பொருளா தாரத்தை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாடு தெளிவாகத் தெரிகிறது. மனித மூலதனம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சமூக நீதி ஆகியவற்றில் கவனம் செலுத்து வதன் மூலம், வரும் ஆண்டுகளில் முற்போக்கு வளர்ச்சியில் கேரளம் முன்னணி மாநிலமாக உருவெடுக்கும் நிலையில் உள்ளது.

கேரள பட்ஜெட் 2025-26: முக்கிய அம்சங்கள்

• நிதிப் பற்றாக்குறை 4.04% இலிருந்து 2.9% ஆக குறைப்பு
• சொந்த வரி வருவாய் 70% அதிகரிப்பு - ரூ.81,000 கோடி
• சாலை மற்றும் பாலப் பணிகளுக்கு ரூ.3,061 கோடி ஒதுக்கீடு
• நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ.1,986 கோடி
• கேஃபோன் டிஜிட்டல் இணைப்புத் திட்டத்திற்கு ரூ.100 கோடி
• சமூக பாதுகாப்பு ஓய்வூதியமாக ரூ.33,210 கோடி வழங்கல்
• சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கு ரூ.385 கோடி
• நிலச்சரிவு பாதிப்பு மறுவாழ்வுக்கு ரூ.750 கோடி
• விவசாய துறை மேம்பாட்டிற்கு ரூ.727 கோடி
• நெல் உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.150 கோடி
• சுகாதாரத் துறைக்கு ரூ.10,431 கோடி
• காருண்யா ஆரோக்ய சுரக்ஷா பத்ததிக்கு ரூ.700 கோடி
• 4.27 லட்சம் வீடுகள் கட்டி முடிப்பு; மேலும் 1.11 லட்சம் கட்டுமானத்தில்
• புதிய ஐடி பார்க்குகளுக்கு ரூ.517 கோடி
• பட்டியல் சாதி மேம்பாட்டிற்கு ரூ.3,236 கோடி
• பழங்குடியினர் நலனுக்கு ரூ.1,020 கோடி
• பெண்கள் நலத் திட்டங்களுக்கு ரூ.706 கோடி
• சிறுபான்மையினர் நலனுக்கு ரூ.105 கோடி
• மீன்பிடித் துறைமுக மேம்பாடு & பால் கிராமத்திற்கு ரூ.295 கோடி
• தொழில்முனைவோர் மேம்பாட்டிற்கு ரூ.1,831 கோடி
• கிரீன் ஹைட்ரஜன் திட்டத்திற்கு ரூ.5 கோடி
• நீதிமன்ற கட்டண திருத்தம் மூலம் ரூ.150 கோடி கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு
• நில வரி சீரமைப்பால் ரூ.100 கோடி கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு