tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆர்.கே. சுரேஷின் மனு தள்ளுபடி

சென்னை, மே 17 - ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் போலீசா ருக்கு எதிரான நடிகர் ஆர்.கே. சுரேஷின் மனு தள்ளு படி செய்யப்பட்டது. பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு எதிராக ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதிக வட்டி தருவ தாகக் கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.2,438 கோடி மோசடி  செய்ததாக 21 பேர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலை யில் ஆர்.கே.சுரேஷின் வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது.

அன்னதானத் திட்டம் துவக்கம்

சென்னை, மே 17 - தமிழ்நாட்டில் திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நிறைவான உணவு வழங்க அன்ன தானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, ஆண்டொன்றுக்கு திருக்கோயிலுக்கு வருகை தரும் 82,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கரூர் அருகே கோர விபத்து வேன் மீது ஆம்னி பேருந்து மோதி தந்தை, மகன் உள்பட 5 பேர் பலி!

கரூர், மே 17-  கரூர் அருகே, மதுரை - சேலம் தேசிய நெடுஞ்சாலை யில், சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் தந்தை மகன் உள்பட 4 பேர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்த துயரம் நிகழ்ந்துள்ளது. பெங்ளூருவில் இருந்து நாகர்கோவிலை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பேருந்து, சேலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை  அதிகாலை வந்துகொண்டிருந்தது. பேருந்தை பெங்க ளூருவைச் சேர்ந்த சுதன் (35) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.  அந்த பேருந்து, கரூர் அருகே உள்ள செம்மடை நாவல்நகர் பகுதியில் அதிகாலை 5.30 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது, பேருந்தின் முன்னால், கரூர் சின்னவடுகப்பட்டியைச் சேர்ந்த முருகன் (55) என்பவர் ஓட்டிச்சென்ற டிராக்டர் சென்றுள்ளது. அப்போது, ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து  டிராக்டரின் பின்பகுதியில் மோதி, சாலையின் மைய  தடுப்புச் சுவரை தாண்டி, எதிர்திசையில் கோவில்பட்டி யில் இருந்து ஏற்காடு நோக்கிச் சென்ற சுற்றுலா வேன்  மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் டிராக்டர் மற்றும் வேன், பேருந்தின்  முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. விபத்தில்  சுற்றுலா வேன் ஓட்டுநர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த சசிக்குமார் (55) மற்றும்  கோவில்பட்டியைச் சேர்ந்த ஆயில் மில் உரிமையாளர்  அருண் (40), அவரது மகன் அஸ்வின் (10), உறவி னர்கள் சாத்தூரைச் சேர்ந்த சரவணன் (40), அவரது மகள் எழில் தக்க்ஷனா (16), பாண்டியன் (40), அவரது  மகள் ஹேமாவர்ஷினி (15) மற்றும் மீனா (51), அனிஸ்  (30), ஆர்த்தி (23) உள்ளிட்ட 15 பேர் படுகாயமடைந்த னர். ஆம்னி பேருந்து ஓட்டுநர் சுதனின் காலில் எழும்பு  முறிவு ஏற்பட்டது. மேலும் பேருந்துக்குள் இருந்த 13  பேருக்கும், டிராக்டர் ஓட்டுநர் முருகனுக்கும் காயம் ஏற்பட்டது.  விபத்தில் படுகாயமடைந்த அருண், அவரது மகன்  அஸ்வின், எழில் தக்க்ஷனா, வேன் ஓட்டுநர் சசிக்குமார்  ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கரூர், வெங்கமேடு காவல்  துறையினர் மற்றும் கரூர் தீயணைப்பு வீரர்கள்  விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை  மீட்டனர். மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்நிலையில், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அனு ஹேமாவர்ஷினி சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இதனால், விபத்தில் இறந்த வர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. 

7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் மருத்துவர்களாக உருவான அரசுப் பள்ளி மாணவர்கள்!

சென்னை, மே 17- நீட் தேர்வு வருவதற்கு முன்பு வரை  தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி களில் இருந்து மதிப்பெண் அடிப்படை யில் ஏராளமான அரசுப் பள்ளி மாண வர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கள் கிடைத்தன. நீட் வந்த பிறகு, அரசுப்  பள்ளிமாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவாகவே போனது.  கடந்த 2018-ஆம் ஆண்டு 5 அரசுப்  பள்ளி மாணவர்களுக்கும், 2019-ஆம்  ஆண்டு 6 அரசுப் பள்ளி மாணவர்களுக்  கும் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. இத னால் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் கனவு பொய்த்துப் போனது. இதனால் பல  மாணவர்களின் உயிர்களும் பறி போனது. இந்நிலையில் தான், கடந்த 2020-ஆம் ஆண்டு நீட் தேர்வு அரசுப்பள்ளி கிராமப்புற மாணவர்களுக்கு தடை யாக இருப்பதை உடைத்தெறியும் பொருட்டு ஆய்வுக்குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5  சதவிகித உள் இடஒதுக்கீட்டை வழங்கி யது. இந்த இடஒதுக்கீட்டை அடுத்து  சுமார் 433 மாணவ - மாணவியர்க்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு வழங்கப் பட்டது. அதில், புதுக்கோட்டை மாவட்  டத்தில் அரசுப் பள்ளியில் படித்த சுமார்  20 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத் தது. 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கிய முதல் ஆண்டில், நீட் தேர்வில் 180-க்கு கீழ் மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. 7.5 சதவிகித உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்து வக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்  கும் மாணவர்களுக்கான கல்வி, விடுதி செலவுகளை அரசே ஏற்றுக் கொண்டதால், ஏழை மாணவர்களின் பணச் சுமையும் குறைந்தது. தற்போது  அந்த அரசுப் பள்ளி ஏழை மாண வர்கள் 7.5 சதவிகித உள் இடஒதுக்கீட் டில் மருத்துவப் படிப்பை படித்து முடித்துள்ளனர்.  மருத்துவப் படிப்புக்கான இறுதித் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை இரவு வெளியாகியதை அடுத்து, மாண வர்கள், அவர்கள் படித்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், கிராமத்தி னர் என அனைவரும் மகிழ்ச்சிய டைந்துள்ளனர். இதன் மூலம், 7.5 சத வீத  இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாண வர்கள் முதல் தலைமுறை மருத்து வர்களாக உருவாகியுள்ளனர்.

அரசு பள்ளிகளில் 1.8 லட்சம்  மாணவர்கள் சேர்ப்பு!

சென்னை, மே 17 - தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப்  பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52  லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்கள் நல னுக்காக கற்பித்தல், கற்றல் சார்ந்து எண்ணும்-எழுத்தும், காலை உணவு, ஸ்மார்ட் வகுப்பறைகள் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் மாணவர்  சேர்க்கையை, மாணவர் சேர்க்கை திருவிழாவாக பள்ளிக்  கல்வித்துறை முன்னெடுத்து வருகிறது. அதன்படி, அரசுப்  பள்ளிகளில் 2025-26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது. பெற்றோர்கள் பலர் ஆர்வமுடன் தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர். அந்தவகையில் இதுவரை 1.8  லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில்  3 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டு, ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். காலை உணவுத் திட்டம், ‘நான் முதல்வன்’, ‘இல்லம்  தேடிக் கல்வி’, ‘உயர்வுக்குப் படி’ என தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை பெற்றோருக்கு எடுத்துரைத்து தொடர்ந்து விடுமுறை நாட்களிலும் மாணவர் சேர்க்கையை ஆசிரி யர்கள் துரிதப்படுத்தி வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தபின், 3 லட்சம் மாணவர்கள் என்ற இலக்கை கடந்து மாணவர்  சேர்க்கை இருக்குமென அதிகாரிகள் தகவல் தெரி வித்துள்ளனர்.