tamilnadu

img

எல்லைப் பகிர்வு நாடுகளிலிருந்து  பொருட்கள் கொள்முதலுக்கு அனுமதி கோரி எம்.பி.யிடம் ‘பெல்’ சிஐடியு மனு 

எல்லைப் பகிர்வு நாடுகளிலிருந்து  பொருட்கள் கொள்முதலுக்கு அனுமதி கோரி எம்.பி.யிடம் ‘பெல்’ சிஐடியு மனு 

திருச்சிராப்பள்ளி, மார்ச் 9 - எல்லைப் பகிர்வு நாடுகளிலிருந்து பொருட்களை வாங்குவதற்கு பெல் நிறுவனத்தை அனுமதிக்க நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசை வலியுறுத்தக் கோரி திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவிடம், பெல் சிஐடியு சங்க தலைவர் ஸ்ரீதர், பொதுச் செயலாளர் பரமசிவம், செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் ஞாயிறன்று மனு கொடுத்தனர். மனுவின் விவரங்கள்: ஜூலை 23, 2020 தேதியிட்ட அறிவிப்பின்படி, சில எல்லைப் பகிர்வு நாடுகளிலிருந்து பொது கொள்முதல் செய்வதற்கு நிதி  அமைச்சகம் விதித்துள்ள கட்டுப்பாடு களை மனுவில் சுட்டிக்காட்டினர்.  இந்த உத்தரவு தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார கவலைகளை இலக்காகக் கொண்டாலும், தற்போது 2,00,000 கோடிக்கு மேல்  மதிப்புள்ள திட்டங்களை செயல் படுத்தி வரும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்க ல்ஸ் லிமிடெட் (பெல்)-க்கு இது குறிப்பிடத்தக்க செயல்பாட்டு சவால்களை உருவாக்கியுள்ளது. மேலும் கூடுதல் ஆர்டர்கள் வர வுள்ளன என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஒரு முதன்மை பொதுத்துறை நிறுவனமாக பெல், தாமதங்களுக்கு கடுமையான அபராதங்களுடன், கடுமையான விநியோக உறுதிமொழிகளை எதிர்கொள்கிறது. சில நாடுகளிலிருந்து கொள்முதல் செய்வதற்கான கட்டுப்பாடு விநி யோகச் சங்கிலியை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இது திட்ட காலக்கெடு மற்றும் செலவு போட்டித் தன்மையை பாதிக்கிறது.  சமச்சீரற்ற நிலை:  இந்த கட்டுப்பாடு பெல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும், இந்தத் துறையில் உள்ள தனியார் நிறு வனங்களுக்கு நீட்டிக்கப்படவில்லை என்பதை மனு சுட்டிக்காட்டியது. இது  ஒரு சீரற்ற விளையாட்டுக் களத்தை உருவாக்குகிறது, ஏனெனில் தனியார் நிறுவனங்கள் இந்த நாடுகளிலிருந்து எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் முக்கியமான பொருட்களை தொடர்ந்து கொள்முதல் செய்கின்றன.

இதனால் அவர்கள் திட்ட காலக்கெடுவை மிகவும் திறமையாக சந்திக்க முடிகிறது.   இவ்வாறு மனுவில் கூறியிருந் தனர். எம்.பியின் பதில்:   மனுவை பெற்றுக் கொண்ட திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.  வைகோ, “எல்லைப் பகிர்வு நாடு களிலிருந்து பொருட்களை வாங்கு வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப் பாடுகள் பெல் நிறுவனத்திற்கு மட்டும் இன்றி இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பாகும். பொதுத் துறை நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் நாட்டிற்கு நன்மை ஏற்படும். இது ஒரு முக்கிய மான விஷயம். இதுகுறித்து நாடாளு மன்றத்தில் பேசுகிறேன். சம்பந்தப் பட்ட அமைச்சருடன் இதுகுறித்து பேசு கிறேன்.  இது எனது கடமை” என்றார்.  நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனுவை கொடுத்த போது சங்க  நிர்வாகிகள் ஜோசப் ஆரோக்கியராஜ், பாலமுருகன், ஜுடு, எம்.ஜி.குமார், சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.