tamilnadu

img

வெறுப்பும், பொய்யுமே மோடியின் குணங்கள் : ராஜ் தாக்கரே சாடல்

மும்பை:

அமேதியில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, “போபர்ஸ் ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நேர்மையானவர் என்று மற்றவர்கள் புகழ்ந்தனர்; ஆனால் இறக்கும்போது அவர் ஊழல்வாதிகளில் நம்பர் ஒன்னாக இருந்தார்” என்று விமர்சித்திருந்தார்.

இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மோடியின் பேச்சு அவரது அரசியல் அநாகரிகத்தை காட்டுவதாக சாடியுள்ளனர்.


இந்நிலையில், ராஜீவ் காந்தி குறித்த, மோடியின் பேச்சை மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் கண்டித்துள்ளார்.இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜ் தாக்கரே, “நரேந்திர மோடியின் பண்புகளை அடையாளப்படுத்தும் விஷயங்கள் மூன்று; அவை, வெறுப்பு, முடிவில்லாத பொய்கள், மனசாட்சியே இல்லாமல் பொது வாழ்வின் அடிப்படை நல்லொழுக்கங்களை மீறுவது” ஆகியவைதான் என்று சாடியுள்ளார்.“மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து மோடி பேசிய வார்த்தைகள் இவற்றை உறுதிப்படுத்துகின்றன; இதை நிச்சயமாக நம் நாடு மன்னிக்காது” என்றும் தெரிவித்துள்ளார். 

;