புனோவில் கண்ணாடித்துண்டு இருந்த பர்கரை உண்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் பூனேவில் சஜித் பதான் என்ற ஆட்டோ ஓட்டுநர், கடந்த சனிக்கிழமையன்று தனது நண்பர்களுடன், பர்கர் கிங் கடைக்கு உணவருந்த சென்றுள்ளார். அங்கு பர்கரை உண்ண ஆரம்பித்த சஜித் பதானின் தொண்டைக்குள் ஏதோ சிக்கியது. இதையடுத்து அவரது வாயிலிருது ரத்தம் கசிந்துள்ளது. இதையடுத்து பதற்றமடைந்த சக நண்பர்கள் அவர் சாப்பிட்ட பர்கரை ஆராய்ந்த போது அதில் சில உடைந்த கண்ணாடித்துண்டுகள் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறியுள்ளார். இதுகுறித்து சஜித் பதான் பர்கர் கிங் கடையின் மீது அளித்த புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்