tamilnadu

img

மகாராஷ்டிரா: விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

மகாராஷ்டிராவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மகாராஷ்டிராவில் உள்ள தானே மாவட்டத்தின் தோகாலி பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மயக்கம் அடைந்த 5 தொழிலாளர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நடந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


;