tamilnadu

img

மகாராஷ்டிரா: வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலி


மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கி 7 பேர்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால்  சாலை முழுவதும் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.
இந்நிலையில் புனே நகரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 5 பேர் பலியாகி இருந்தனர்.  புனே நகரின் சின்ஹாகட் சாலையில் வெள்ளத்தில் சிக்கிய கார் ஒன்றில் இருந்து ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதேபோன்று புனே நகரின் சஹாகர் நகர் அருகே மற்றொரு உடலை தீயணைப்பு படை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.