tamilnadu

img

ஐஐடி மும்பையில் அடுத்த செமஸ்டர் ஆன்லைன் முறையில் இயக்கப்படும்

கோவிட்-19 பரவல் காரணமாக, ஐஐடி மும்பையில் அடுத்த செமஸ்டர், நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,73,105 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 1,42,900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஐஐடி மும்பையின் இயக்குனர் சுபாசிஸ் சவுத்ரி நேற்றிரவு தனது முகநூல் பதிவில், கோவிட்-19 தொற்று அதிகரிக்கும் இந்த நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் எந்த சமரசமும் ஏற்படாத வகையில், அடுத்த செமஸ்டரில் நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் மூலம் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.