tamilnadu

img

மும்பை ஐஐடி வகுப்பறையில் நுழைந்த மாடு -வைரலாகும் வீடியோ 

மும்மையில் உள்ள ஐஐடி வகுப்பறையில் மாடு நுழைந்த சம்பவம்  கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் உள்ள ஐஐடியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போது மாடு ஒன்று வகுப்பறையில் நுழைந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.  இதுகுறித்த வீடியோ ஒன்று டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது.  

இரண்டு வாரங்களுக்கு முன் (ஜூலை 11 ) கேரளாவை சேர்ந்த மாணவர் ஒருவர், ஹாஸ்டல் அருகில் மாடு முட்டி காயங்களுடன் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது  வகுப்பறைக்கு உள்ளேயே மாடு நுழைந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 

;