tamilnadu

img

மகாராஷ்டிரா சாலை விபத்து:11 பேர் பலி

மகாராஷ்டிராவில் பேருந்தும் லாரியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் நிம்குல் கிராமம் அருகே ஷஹடா-தொண்டைச்சா சாலையில் நேற்றிரவு 10.30 மணியளவில் அவுரங்காபாத் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.எதிர்பாராத விதமாக எதிரே வந்த கண்டெய்னர் லாரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  இரு வாகன ஓட்டுநர்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.