பொள்ளாச்சி, ஆக, 31- பொள்ளாச்சி பகுதி விவ சாயிகள் பயிர் காப்பீடு செய்ய செப்டம்பர் 15 ஆம் தேதி கடைசி நாளாக வேளாண்துறை அதிகாரி கள் தகவல் தெரிவித்துள் ளனர். இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறுகை யில், பொள்ளாச்சி பகுதி களில் உள்ள விவசாயிகள் சோளம், மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் கனிசமான அளவில் பயிரி டப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்கள், பூச்சி தாக்குத லால் உள்ளிட்ட காரணத் தால் விவசாயிகள் பாதிக் கப்பட்டு வருவதால் மத்திய அரசு பயிர் காப்பீடு திட் டத்தை செயல்படுத்தியது.
இந்நிலையில் பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனை மலை வட்டார விவசாயி கள், சோளம், மக்காச் சோளம், பருத்தி ஆகிய பயிர்களுக்கு சந்தா தொகை (பிரிமியம்) செலுத்தி காப்பீடு செய்ய செப். 15 ஆம் தேதி கடைசி நாளாக வேளாண் துறை அறிவித் துள்ளது. மேலும், பயிர் காப்பீடு செய்ய சோளத்திற்கு ரூ.209 ம்,
மக்காசோளத்திற்கு ரூ.588ம், பருத்திக்கு ரூ.459ம் சந்தா தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சோளத்திற்கு ரூ.10 ஆயிரத்து 648ம், மக்காச் சோளத்திற்கு ரூ.29 ஆயி ரத்து 388ம், பருத்திக்கு ரூ. 9 ஆயிரத்து 189 இழப்பீடும் வழங்கப்படுகிறது. எனவே, பயிர் காப்பீடு செய்ய வரு கின்ற செப்டம்பர் 15 ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது. உடனடியாக விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் வங்கி கிளைகளில் பயிர் காப்பீட்டிற்கான சந்தா (பிரி மியம்) தொகை செலுத்த லாம். மேலும், கூடுதல் தக வல்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை அலு வலகத்தை தொடர்பு கொள் ளலாம் என தெரிவித்துள் ளனர்.