தரங்கம்பாடி, ஜூலை 19- மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் அருகே யுள்ள சங்கேந்தி கிராமத்தில் அதிமுக உள்ளி ட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 15 குடு ம்பங்களை சேர்ந்தவர்கள் மார்க்சிஸ்ட் கட்சி யில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களை வர வேற்கும் நிகழ்ச்சி அக்கிராமத்தில் கட்சியின் வட்டசெயலாளர் பி.சீனிவாசன் தலைமை யில் நடைபெற்றது. கட்சியின் கொடியினை மா வட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ் ஏற்றி வைத்தார். மாவட்ட க்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், ஜி.கலை ச்செல்வி, ஏ.ரவிச்சந்திரன், மூத்த தலைவர்க ளில் ஒருவரும், முன்னாள் வட்ட செயலாளரு மான டி.கோவிந்தசாமி, வாலிபர் சங்க வட்ட த்தலைவர் வீ.எம்.சரவணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டத் தலைவர் இளைய ராஜா மற்றும் கட்சி உறுப்பினர்கள், வாலிபர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.