தஞ்சாவூர், நவ.18- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட, கிளாமங்கலம் ஊராட்சியில், கிளா மங்கலம் தெற்கு, வடக்கு வேதநாயகிபுரம், காணான் கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்கு மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். எந்நேரமும் அலு வலர் இன்றி பூட்டியே கிடக்கும் ஊராட்சி மன்ற அலு வலகத்தை திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளாமங்கலம் கிளைச் செயலாளர் வை.கல்யாணசுந்தரம் தலைமை யில், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை. ஏசுராஜா, திருவோணம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பொய்யாமொழியைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது, “கிளாமங்கலம், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாத காலமாக தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. இத னால் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் தெருவில் நடமாட அச்சுறுத்தலாகவும், பணி முடிந்து வீடு திரும்புவோர் வீடு சென்று சேர பாதுகாப்பு இல்லாத நிலையும் உள்ளது. பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதால், பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, எரியாத தெரு விளக்குகளை ஒளிரச் செய்யவும், குடிநீர் குழாய்களை சரி செய்து, தட்டுப்பா டின்றி பாதுகாப்பான குடிநீர் வழங்கவும், எந்நேரமும் அலுவலர் இன்றி பூட்டியே கிடக்கும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைக்க வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கி றோம்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அப்போது ஒரத்தநாடு கிளைத் தலைவர் டி.திங்கள் கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஊராட்சி ஒன்றிய ஆணையர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.