tamilnadu

img

அரசு ஊழியர்கள் - மக்கள் சந்திப்பு

கிருஷ்ணகிரி, நவ.11- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மக்கள்  கோரிக்கைகளுக்கான மாநிலம் தழு விய பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகி றது. அதன் ஒரு பகுதியாக ஓசூரில் ரயில்  நிலையம் முன்பிருந்து துவங்கிய பிரச்சாரக்  குழுவுக்கு மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் நடராஜன்  முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செய லாளர் பாஸ்கர் துவக்கி வைத்தார். மாநிலத்  தலைவர் பெரியசாமி, துணைத் தலைவர்  பழனியம்மாள், ஆகியோரும் உரையாற்றி னர். பொருளாளர் தேவராஜ், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெயராமன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஓசூர் ரயில் நிலையம், வட்ட வருவாய் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் நடை பெற்றது.முன்னதாக மக்கள்  கலைக்குழுவின் சங்கர், பெருமாள் ஆகி யோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மத்திய-மாநில அரசுகள் இளைஞர் களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், இருக்கும் வேலைகளுக்கும் வேட்டு வைக்கக்கூடாது.  நிரந்தர வேலை களை ஒப்பந்த முறையில் வெளியில் விடு வதையும் (அவுட்சோர்சிங்) கைவிட வேண்டும். தொகுப்பு ஊதிய, மதிப்பூதிய முறைகளை மாற்றி அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்க ளின் பறிக்கப்பட்ட உரிமைகளை, தொழிற்  சங்க உரிமைகளை பாதுகாத்திட வேண்டும்.  மக்கள் நல திட்டங்களை, மானிய திட்டங்  களை, 100 நாள் வேலை உட்பட, விவசாயி களை, கிராம மக்களை, பாதுகாக்கும் திட்டங்  களை கைவிடாதே, காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.