tamilnadu

img

பெரம்பலூர் அரசு கல்லூரியில் 11 பாடப் பிரிவு நீக்கத்திற்கு எதிர்ப்பு

பெரம்பலூர், ஜூன் 17- பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அருகே 2006 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மொத் தம் 2 ஆயிரத்து 400 மாணவ- மாணவி கள் பயின்று வருகின்றனர். இதில் பேரா சிரியர்கள் மற்றும் அலுவலர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் தொகுப்பூதிய அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி யாக செயல்பட்டு வந்த குரும்பலூர் கல்லூரியை அரசு கலை அறிவியல் கல்லூரியாக தமிழக அரசு அறிவித்தது. தொடர்ச்சியாக நடைமுறையில் இருந்த 11 பாடப்பிரிவுகளை உயர் கல்வித்துறை இயக்குனரகம் ரத்து செய்து அறிவித்தது. பொருளாதார ரீதி யில் மிகவும் பின் தங்கிய மாவட்ட மாகவும், சதவீத அடிப்படையில் பிற் படுத்தப்பட்ட மாணவர்களும், தாழ்த் தப்பட்ட சமூகத்தினரும் அதிகம் உள்ள மாவட்டமாகும். இதில கல்லூரியில் நீக்கிய பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கை விண்ணப் பம் பெற்ற ஏழை எளிய மாணவ- மாண விகள் நேர்காணலுக்கு வந்த போது இத்தகவலறிந்து பெரும் அதிர்ச்சி யடைந்தனர். ஒரு பாடப்பிரிவிற்கு 60 பேர் வீதம் 11 பாடப்பிரிவிற்கும் சோத்து 660 பேர் பயின்றும் இதற்கு பணிபுரிந்து வந்த 50 பேராசிரியர்கள் வேலை இழக் கும் நிலையும் தற்போது ஏற்பட்டுள் ளது. இந்த திடீர் உத்தரவால் பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மாணவர்களும் கல்வி கற்க முடி யாத நிலையில் பேரதிர்ச்சியடைந்துள் ளனர். மேலும் திங்களன்று தேர்வு விடு முறை முடிந்து கல்லூரிக்கு வந்த மாணவ- மாணவிகள், நீக்கப்பட்ட பாடப்பிரிவுகளை மீண்டும் சேர்க்க வலி யுறுத்தி 200-க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் துறையூர் சாலையிலுள்ள கல்லூரி முன்பு காலை மறியலில் ஈடு பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி ரவீந்திரன், மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளை மனுவாக தயார் செய்து கல்லூரி நிர்வா கம், மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினரிடம் வழங்கி தீர்வு காணுமாறு கூறியதையடுத்து போராட் டத்தை ஒத்தி வைப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.