tamilnadu

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதச் செயல் சிஐடியு-வின் கோரிக்கைகள் ஏற்பு; போராட்டம் கைவிடல்

தரங்கம்பாடி, ஜூலை 15-  மயிலாடுதுறை அரசு மருத்துவமனை யில் தூய்மைப்பணி, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை செய்யும் ஸ்மித் என்ற தனி யார் நிறுவனத்தில் பணியாற்றிய 5 தொழிலா ளர்களை திடீரென பணியிலிருந்து அந்நிறுவ னம் நீக்கியது. வாழ்வாதாரம் இழந்து தவித்த தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், உடனடியாக அவர்களுக்கு வேலை வழங்க  வலியுறுத்தி புதனன்று சிஐடியு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக இருந்தது. இந்நிலையில் கோட்டாட்சியர் அலுவ லகத்தில் வட்டாட்சியர் முருகானந்தம் தலை மையில்   செவ்வாயன்று சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.ரவீந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் டி.துரைக்கண்ணு, விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் ஜி.ஸ்டாலின், சிபிஎம் வட்டச் செயலாளர் சி.மேகநாதன், ஓய்வூதியர் சங்க மாவட்டத்  தலைவர் வ.பழனிவேலு, அரசு மருத்துவ மனை துப்புரவு தொழிலாளர் சங்க செயலா ளர் (சிஐடியு) நெப்போலியன் மற்றும் ஸ்மித்  நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியம் வழங்குவதாகவும், நிலுவைத்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களான பானுமதி, ஜெனிபர், சங்கீதா, விநாயகமூர்த்தி, சேது ஆகி யோருக்கு மீண்டும் ஜூலை 17 அன்று பணி  வழங்குவதாகவும் உறுதி அளித்ததன் பேரில்  பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் உண்ணாவிரதப் போராட்டம் கை விடப்பட்டது.  மேலும் செக்யூரிட்டி பணி செய்த சேது என்பவரை பழிவாங்கும் நோக்கத்தில் துப்பு ரவு பணியாளராக நியமித்து எந்தவித பாது காப்பு உபகரணங்களுமின்றி கொரோனா நோயாளிகள் வார்டில் பணி செய்ய நிர்ப்ப ந்திப்பதை உடனடியாக நிறுத்திக்கொண்டு மீண்டும் அவரை செக்யூரிட்டி பணி செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியு றுத்தியதையும் பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்டனர்.