தரங்கம்பாடி, ஜூலை 26- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் கழனிவாசல் கிராமத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 15 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணையும் நிகழ்ச்சி அக்கிராமத்தின் தலைவர் முனுசாமி தலை மையில் நடைபெற்றது. மறைந்த தோழர் கே.அன்பழகன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடை பெற்ற நிகழ்ச்சிக்கு முன்னதாக கட்சி கொடி யினை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். துரைராஜ் ஏற்றி வைத்தார். வட்ட செயலாளர் பி.சீனிவாசன் புதிதாக கட்சியில் இணைந்த வர்களை வரவேற்று பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.