ஈரோடு,செப். 18- தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை செப்.9 ஆம் தேதி முதல் செப்.12 ஆம் தேதி வரை நடை பெற்று வருகிறது. ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள அரசு பூம்புகார் விற் பனை நிலையத்தில் நடைபெற்று வரும் இக்கண்காட்சியில், காகிதக் கூழ் மட்டும் மண்ணால் செய்யப்பட்ட லட்சுமி, கணேஷ், சரஸ்வதி, துர்கா, மகாபாரதம், தட்சிணாமூர்த்தி, நாராயணன், தசாவதாரம், அஷ்ட லட்சுமி, மீனாட்சி கல்யாணம், ஸ்ரீனிவாச கல்யாணம், ராஜலட்சுமி, கிருஷ்ணன், தங்கதேர், கல்யாண செட், பள்ளிக்கூடம் செட், திருப்பதி, விசுவரூபம் செட், சீமந்தம் செட், பத்ரிநாராயணன் செட், கும்பகர்ணன் செட், பிரதோஷ சிவன், பெருமாள் தயார், மலேசிய முருகன், தன்வந்திரி, மூகாம்பிகை, வாரகி அம்மன், விவ சாயம் செட், ஜல்லிக்கட்டு, தலை வர்கள், ராகவேந்திரர், காய்கறிகள், பழங்கள், மரப்பாச்சி பொம்மைகள் உட்பட பல விதமான கொலு பொம் மைகள் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது. இக்கண்காட்சியில் ரூ.10 முதல் ரூ.20 ஆயிரம் வரையிலான கொலு பொம்மைகள் விற்பனை செய்யப் படுகிறது. இக்கண்காட்சியில் கொலு பொம்மைகளுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது என பூம்புகார் விற்பனை நிலையம் மேலாளர் ஜி.சரவணன் தெரிவித்துள் ளார்.