திருவாரூர் டிச.6- கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம் நகராட்சி நடூர் பகுதி யில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலி யான சம்பவத்திற்கு காரண மானவர்களை கண்டித்தும், உயிரிழந்தோரின் குடும்பங்க ளுக்கு தலா 25 லட்சம் இழப்பீடு கோரி இந்திய மாணவர் சங்கத் தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருவாரூரில் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி மாண வர்கள் வகுப்பறையை புறக்க ணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் இரா.சுர்ஜித் தலைமையேற்றார். மாநில துணைச் செயலாளர் ஆறு.பிரகாஷ் கண்டன உரை யாற்றினார். ஜனநாயக மாதர் சங்கத்தினர் மீது காவல்துறை நடத்திய தடியடி தாக்குதலை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.