தென் கொரியாவின் முக்கிய நகரான இன்ஷியானில் கொரிய ஓபன் என்ற பெயரில் சர்வ தேச பேட்மிண்டன் தொடர் நடை பெற்று வருகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதலாவது அரை யிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பருப்பள்ளி காஷ்யப் பேட் மிண்டன் உலகின் முதல் நிலை வீரரான ஜப்பானின் கென்டோ மொமோடாவை எதிர்கொண்டார். தொடக்கம் ஆதிக்கம் செலுத்திய மொமோடா 21-13, 21-15 என்ற செட் கணக்கில் காஷ்யப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கென்டோ மொமோடா தனது இறுதிப்போட்டியில் சீன தைபே வீரர் டியன் சென்-னை எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் ஞாயிறன்று நடைபெறுகிறது.