tamilnadu

img

தொழிலாளர்களின் வேலை நேரத்தை உயர்த்துவதை கண்டித்து போராட்டம்

பெரம்பலூர், மே 11- ஊரடங்கு முடிந்த பின் தொழிற் சாலைகளில் 8 மணி நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரம் வேலை என உயர்த்துவது உள்ளிட்டவை கண்டித்து பெரம்பலூரில் சிஐடியு அமைப்பினர் போராட்டத்தில் ஈடு பட்டனர். மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் எஸ்.அகஸ்டின், ஆட்டோ சங்கம் சார்பில் சண்முகம், ரெங்கநாதன், சாலையோர வியாபாரி கள் சங்கம் சார்பில் பி.ரெங்கராஜன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் தங்களது வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினர்.

மன்னார்குடி
இதே போல் மன்னார்குடியில் ஐந்து இடங்களில் போராட்டம் நடை பெற்றது. மன்னார்குடி மஸ்தான் பள்ளி தெருவில் உள்ள சிஐடியு அலு வலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரெகுபதி இணைப்பு சங்க தலைவர்கள் டி.ஜெகதீசன், ஜி.தாயுமானவன், ஏபி.தனுஷ்கோடி, ஜி. மாரிமுத்து கலந்து கொண்டனர். ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆசாத் தெருவில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சிஐடியு ஆட்டோ சங்கத் தலைவர்கள் பொன்.ஆறு முகம் ஹரிமோகன் கண்ணன் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மன்னார்குடி பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தலைவர்கள் கோவிந்தராஜ் சிவ சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அசேஷம் நகரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட பொறுப்பா ளர் சகாயராஜ் குடும்பத்தார் மற்றும் கோபி கலந்து கொண்டனர். மன்னார் குடி நகர ஆழ்வார் ஆர்ப்பாட்டத்தில் உட்புற தலைவர் தலைவர் கண்ணாடி வீரன் பொன்னுசாமி, தெட்சிணா மூர்த்தி பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் முழுவதும் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு.வினர் அவரவர் இல்லங்களுக்கு முன்பாக நின்று சி.ஐ.டி.யு. கொடி யேந்தி ஆர்ப்பாட்டம் செய்திடுமாறு, சி.ஐ.டி.யு. நாகை மாவட்டச் செயலா ளர் சீனி.மணி, மாவட்டத் தலைவர் பி.ஜீவா வழிகாட்டுதல்படி, நீலப்பாடி யில் சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.செல்வ ராஜ் தலைமையிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.