tamilnadu

img

மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

பெரம்பலூர், ஆக.17- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 3-வது மாநில பெரம்பலூர் லட்சுமி இன்ஸ்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்சஸ் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சு, கவிதை, கட்டுரை போட்டி நடைபெற்றது.பேராசிரியர் சந்திரமௌலி வரவேற்றார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் என்.செல்லதுரை தலைமை வகித்தார். லட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சி.கருணாகரன், கவிஞர் இராமர், பேராசிரியர் குமணன், கவிஞர் தாஹீர்பாஷா ஆகியோர் விளக்கவுரையாற்றினர். கவிஞரும் எழுத்தாளருமாகிய இரா.எட்வின் சிறப்புரை ஆற்றினார். தனலட்சுமி சீனிவாசன் மகளிர் மற்றும் கலை அறிவியல் கல்லூரி, குரும்பலூர் பாரதிதாசன் அரசு கல்லூரி, லட்சுமி இன்ஸ்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்சஸ் கல்லூரி, திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் போட்டிகளில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு கேடயமும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. லட்சுமி மருத்துவமனை முதல்வர் தங்கராசு நன்றி கூறினார்.

;