tamilnadu

img

குடியுரிமைச் திருத்தச் சட்டத்தை எதிர்த்து பெரம்பலூரில் பேரணி - முற்றுகை

பெரம்பலூர், பிப்.19- மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய மும்முனை தாக்குதலை இந்திய மக்கள் மீது தொடுத்துள்ளது.  மத அடிப்படையில் மக்களை பிளக்கும் இந்த மோசமான நடவ டிக்கைகளை எதிர்த்து பெரம்பலுர் மாவட்ட அனைத்து மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியில் இருந்து பாலக்கரை வழியாக பேரணி யாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டி காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. அனுமதி மறுத்ததோடு ஏராள மான போலீஸ் குவிக்கப்பட்டு ஆட்சி யர் அலுவலகம் செல்ல முடியாத வாறு பேரிகாட் தடுப்பு அமைத்து இருந்தனர். எனினும் தடையை மீறி ரோவர்ஆர்ச் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேரணியாக சென்று பாலக்கரை பகுதியில் உள்ள ஆட்சியர் நுழைவுவாயில் வரை சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். உலமாக்கள் மாவட்டத் தலைவர் மௌலானா முகமதுமுனீர் தலைமை வகித்தார். உலமாக்கள் முஸ்தபாஹ ஜாத், லெப்பைகுடிகாடு கிழக்கு ஜமாஅத் ஆரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் என்.செல்லதுரை, சிபிஐ வீ.ஞானசேகரன், பாதிரியார் ஜஸ்டின்சாந்தகுமார், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாவட்டச் செயலாளர் ரெனோ செபாஸ்டியர், திமுக மாவட்டப் பொருளாளர் ரவி உட்பட தோழமை கட்சியினர் பங்கேற்றனர்.