tamilnadu

img

செங்கல், ஹாலோபிளாக் ஏதுவுமின்றி தெர்மாகோலை கொண்டு வீடு வழிகாட்டுகிறார் பெரம்பலூர் பொறியாளர்

பெரம்பலூர், மே 28 -மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் பெரம்பலூர் அருகே, தெர்மாகோலால் பொறியாளர் ஒருவர் வீட்டை கட்டி வருகிறார்.  தெர்மோக்கோல் வீடு பாதுகாப்பானது, பொருள் செலவு குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் என்பவர் தற்போது செங்கல், கல் ஏதுவுமின்றி தெர்மாக்கோலை கொண்டு வீடு கட்டி வருகிறார். 1,150 சதுர அடி பரப்பளவில், 10 லட்சம்ரூபாய் செலவில் தெர்மாகோல் மூலம் வீடுகட்டுகிறார். கட்டுமான பணிகள் 50 சத வீதத்துக்கும் மேல் பணிகள் நிறைவடைந்து விட்டன. முதலில் இதற்கு தனது குடும்பத்தினர் தயங்கிய போதும் பின்னர், ஒப்புக்கொண்டதாக ராமர் கூறினார்.தெர்மாகோல் தொழில்நுட்பம் மூலம் வெளிநாடுகளில் அதிகமாக வீடுகள் கட்டிவருகின்றனர் என்கிறார் மற்றொரு பொறி யாளர் ஆனந்தகீதன். இதனால் 50 சதவீத பொருள் விரயம் குறையும் என்பதோடு மேற்கொண்டு செங்கல், கருங்கல், எதுவும் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். வீட்டின் எடை மிகக்குறைவு என்றாலும் வீடுகளில் ஏற்படும் விரிசல், சூறாவளி, கடும் மழை போன்ற அனைத்தையும் தாங்கும் சக்தி உண்டு என்றார் பொறியாளர் ஆனந்தகீதன். தற்போது ஏற்பட்டுள்ள மணல் மற்றும் செங்கல் தட்டுப்பாட்டிற்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் ஏற்றது என்றும் அவர் தெரிவித்தார்.