கேரள மாநிலம் பாலா சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் வெள்ளியன்று (செப்.20) நிறைவு பெற்றது. அதையொட்டி ஆயிரக்கணக்கான இடது ஜனநாயக முன்னணி ஊழியர்களும் ஆதரவாளர்களும் பங்கேற்ற ‘கொட்டிக்கலசம்’ என்கிற பேரணி நடைபெற்றது. 54 ஆண்டுகளாக கே.எம்.மாணி தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதி இம்முறை இடது ஜனநாயக முன்னணி வசமாகும் என்பதை பறைசாற்றுவதாக இந்த பேரணி அமைந்திருந்தது.