tamilnadu

img

மழையால் கடலில் சிக்கி தவித்த 24 மீனவர்கள் மீட்பு

கஸ்தூர்பா காந்தி கப்பல் மீட்புக்குச் சென்று கொண்டிருந்த பொழுது, கர்நாடக கடற்கரையில் இருந்து 15 மைல் தொலைவில் ஐ.எஃப்.பி கம்ருல் பஹார் என்ற மீன்பிடி படகு சிக்கியுள்ளது. இதிலிருந்து 24 மீனவர்களை மீட்டுள்ளனர்.

பெங்களூரு மாநிலத்தில் கஸ்தூர்பா காந்தி கப்பல் மீட்புக்குச் சென்றபோது கர்நாடக கடற்கரையில் இருந்து 15 மைல் தொலைவில் ஐ.எஃப்.பி கம்ருல் பஹார் என்ற மீன்பிடி படகு சிக்கியது. கடற்கரையில் மிக அதிக மழை பெய்து வருகிறது. இதனால் மீன்பிடி படகு சிக்கித் தவித்த மீனவர்களை மீட்டு பட்கல் துறைமுகத்திற்கு கொண்டுவந்தனர். பெங்களூரின் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மீட்பு குறித்து ட்வீட் செய்துள்ளார்.
இதில், “உந்துவிசை சக்தியை இழந்த மீன்பிடி படகின் உரிமையாளர், மீனவர்களை மீட்பதற்காக டி.டி. ஃபிஷர் கார்வாரைக் கோரியுள்ளார். கடலில் முழு மீட்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. செப்டம்பர்  11, 2020 அன்று சுமார் 10.30 மணிநேரத்தில் நல்ல நிலையில் அனைத்து மீனவர்களும் ஐ.சி.ஜி கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவதற்காக கடலோர கண்காணிப்பு வலையமைப்பு மூலம் இப்பகுதியில் மின்னணு கண்காணிப்பு பராமரிக்கப்பட்டு வருகிறது. வழக்கமான வானிலை எச்சரிக்கை ஆலோசனையும் அனுப்பப்படுகிறது, "என்று செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

கர்நாடகாவில் ஆகஸ்ட் 1 முதல் பெய்த கனமழையால் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். சுமார் 4.03 லட்சம் ஹெக்டேரில் 10,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பயிர்களை சேதமடைந்துள்ளது. மேலும் மாநிலத்தில் 14,182 கி.மீ சாலைகள் சேதமடைந்துள்ளது.