இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 போட்டிகளில் நடந்தது வருகிறது. இதில், சட்ட விரோதமாக பந்தயம் கட்டி சூதாடியதாக 2 நார்களை பெங்களூர் நகர குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அண்மையில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் பந்தயம் கட்டி சூதாடியதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவருடன் இருந்து 53.5 லட்சம் ரெக்கமாகவும், அவர்கள் பயன்படுத்தி இரண்டு கைப்பேசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கனவே, கடந்த வாரம் இதே போன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதில், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 30.5 லட்சம் ரொக்க பணமும், இரண்டு கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் மட்டுமே பெங்களூரு பகுதியில் ஐபிஎல் விளையாட்டில் சூதாடியதாக 10 திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.