புதுதில்லி,ஆக.30- நீட் ஜேஇஇ தேர்வு குறித்து ஆலோசிக்க மாணவர்கள் விரும்புகின்றனர். ஆனால்,பொம்மை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை வழங்குவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சாடியுள்ளார். ஞாயிறன்று மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் போது, உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் உள்ளது. தமி ழகத்தில் பொம்மைகள் செய்யும் மையமாக தஞ்சாவூர் விளங்குகிறது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் மிகவும் பிரபலம்.இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மை கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய வேண்டும். உள்நாட்டு விளையாட்டு பொருட்களை வாங்க ஊக்கவிக்க வேண்டும் என பேசினார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒரு வரான ராகுல்காந்தி டிவிட்டர் பதிவில், ஜேஇஇ - நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள், தேர்வு குறித்து ஆலோ சிக்க விரும்புகின்றனர். ஆனால், பிரதமர் பொம்மை கள் குறித்து ஆலோசனை வழங்குகிறார் என தெரிவித் துள்ளார்.