tamilnadu

img

யார் வந்தாலும் கதவை மூட மாட்டோம்

புதுதில்லி:
பாஜக-வில் சேர விரும்புவோருக்கு ஒருபோதும் கதவை மூட மாட்டோம்; எப்போதும் அது திறந்தே இருக்கும் என்று மத்திய அமைச்சர்பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். “பாஜக தனது மத்திய ஆட்சியின் வலிமையால், தென்மாநிலங்களில் உள்ளஎதிர்க்கட்சிகளை கலைப்பதாக கூறுவது தவறான கருத்து.நாங்கள் எந்த ஒரு கட்சியையும் கலைக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், எங்கள் கட்சியில் இணைவதற்கு ஆர்வத்தோடு வருபவர்களுக்கு நாங்கள் கதவை மூடுவது கிடையாது.காங்கிரஸ் கட்சியிலிருந்து பலர் வெளியேறி வருவதற்கு, அக்கட்சியில் சரியான தலைவர் இல்லாததே காரணம்” என்றும் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார்.