tamilnadu

img

மோடி பேட்டி கொடுத்தபோதே நாங்கள் பாதி வென்று விட்டோம்! ராகுல் காந்தி அதிரடி

புதுதில்லி, மே 18-மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்டபிரச்சாரம் நிறைவடையும் நேரத்தில் பாஜக தலைவர் அமித்ஷா நிருபர் களை சந்தித்தார். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் மோடியும் பங்கேற்றார்.மோடி பிரதமராக பதவி ஏற்ற 5 ஆண்டுகளில் பத்திரிகையாளர்களை சந்திப்பதுஇதுவே முதல் முறை என்பதால், உலகம் முழுவதும் இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்த பரபரப்பை சிறிதுநேரம் கூட, மோடி நீடிக்கவில்லை.பத்திரிகையாளர் சந்திப்பின் துவக்கத்திலேயே “நான் உங்களுடைய கேள்விகள் எதற்கும் பதில் அளிக்க முடியாது. ஏனெனில் இது அமித்ஷா நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு” என்று கூறி, செய்தியாளர்களின் எதிர்பார்ப்பை உப்புச் சப்பில்லாமல் ஆக்கினார். சொன்னபடியே எந்த கேள்விக்கும் மோடி பதிலளிக்கவில்லை. இதைப் பார்த்து, எதிர்க்கட்சியினர் தற்போது விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர். மோடிக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை? என்றும் கிண்டலடித்துக் கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மோடியைக் கிண்டல் செய்துள்ளார். “மோடி ஜி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் பத்திரிகையாளர் சந்திப்பு மிகவும் பிரமாதமாக இருந்தது”என்று ட்விட்டரில் அவர் கலாய்த்துள் ளார். “அடுத்த முறையாவது, செய்தியாளர் சந்திப்பின் போது, மோடி பதிலளிப்பதற்கு அமித்ஷா அனுமதியளிக்க வேண்டும்” என்றும் மோடியை வாரியுள்ளார்.அத்துடன், பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்புக்கு வந்ததே, எதிர்க் கட்சிகளுக்கு கிடைத்த பாதி வெற்றி என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.