tamilnadu

img

விவசாயிகளைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் ... நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்

புதுதில்லி:
விவசாயிகள் விரோத வேளாண் சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக புதன்கிழமையன்று காலை நாடாளு மன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியான முறையில்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 நாடாளுமன்ற உறுப்பினர்கள், “விவசாயிகளைப் பாதுகாப்போம்”, “தொழிலாளர்களைப் பாது காப்போம்”, “ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்” என்ற பதாகை களை கைகளில் ஏந்தியபடி  நாடாளுமன்ற வளாகத்திலிருந்த  அம்பேத்கர் சிலையிலிருந்து, மகாத்மா காந்தி சிலை நோக்கி பேரணியாகச் சென்றனர். பின்னர் மகாத்மா காந்தி சிலை முன்பு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்,சிபிஎம், சிபிஐ, திமுக, ஆர்ஜேடி, ஏஏபி, சமாஜ்வாதிக் கட்சி மற்றும்தேசியவாதக் காங்கிரஸ் ஆகியகட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர் கள் இப் போராட்டத்தில் பங்கேற் றார்கள். மாநிலங்களவையில் தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றும் வகையில் கொண்டுவரப்பட்ட மூன்று திருத்தச் சட்டமுன்வடிவுகளும் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடிக்கொண்டிருக்குபோது நிறைவேற்றினர். 

இந்தச் சட்டமுன்வடிவுகள் நிறைவற்றப்பட்டவுடன்  மாநிலங்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று இதுவரை 25 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாதித்துள்ளதால் இவ்வாறு கூட்டத்தொடர் முன்னதாக ஒத்திவைக்கப்படுவதாகக் கூறப்பட்டது.  
(ந.நி.)

;