tamilnadu

img

கால்நடை மருத்துவர் படுகொலை:குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் என்கவுண்டர்

தெலுங்கானாவில் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் இன்று காலை என்கவுண்டரில் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27-ம் தேதி இரவு கால்நடை பெண் மருத்துவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும்  கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் சேர்லாப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.  இதற்கிடையே இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவம் நடந்த இடத்திற்கு குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்து சென்ற போது 4 பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதால காவல் துறையினர் அவர்களை சுட்டுக்கொலை செய்தாக கூறப்படுகிறது. 
காவல்துறையினரின் என்கவுண்டர் நடவடிக்கைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.