சென்னை, செப். 4- ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக் கூடாது என மதி முக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தில்லியில் நடந்த மாநில உணவுத்துறை அமைச்சர் கள் கூட்டத்தில், பேசிய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், ‘இதுவரை 14 மாநி லங்கள் இந்தத் திட்டத்தில் சேர ஆயத்தமாக உள்ளன; டிசம்பர் மாதத்தில் அந்த மாநிலங்களில் ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட் டம் நடைமுறைக்கு வரும்’ என்று கூறியுள்ளார்.
இந்தத் திட்டம் நிறை வேற்றப்பட்டால், தமிழகம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகும். பொதுப்பகிர்வு முறை என்பது மத்திய, மாநில அரசுகளின் பொதுப் பட்டியலின் கீழ் வருவதைப் பயன்படுத்தி, மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்து ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் ஒரு கோடியே 99 இலட்சத்து 95 ஆயிரத்து 299 குடும்ப அட்டைதாரர்க ளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு, அவை ஆதார் அட்டைகளு டன் இணைக்கப்பட்டு அடிப் படைத் தேவைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மத்திய அரசின் அழுத்தத்திற்கு அடி பணிந்து ஒரேநாடு,ஒரே குடும்ப அட்டை திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப் படுத்தினால், தமிழக பொதுப் பகிர்வு முறை சீர்குலைந்து விடும். எனவே, ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத் தில் தமிழகத்தை இணைக் கக்கூடாது என்று வலி யுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.