tamilnadu

img

ஜாமியா பல்கலை. துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் கணக்கு முடக்கம்  பேஸ்புக் நிறுவனம் அதிரடி 

தில்லி 
தலைநகர் தில்லியில் உள்ள புகழ்பெற்ற ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு மாதமாகக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராடி வருகின்றனர். மாணவர்கள் மட்டுமின்றி மக்களும் இந்த போராட்டக்களத்தில் குதித்துள்ளதால் அப்பகுதி போராட்டக்களமாக உள்ளது.  

வெள்ளியன்று போராட்ட கூட்டத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் மாணவர்கள், பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் ஒரு மாணவர் காயமடைந்தார். ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் முழு விபரம் இன்னும் தெரியவில்லை என்றாலும் பேஸ்புக் நிறுவனம் அவரை கண்டுபிடித்துப் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. புகைப்படம் தெளிவாக இல்லை என்பதால் காவல்துறை விசாரணையில் மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது.இந்நிலையில், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் பேஸ்புக் கணக்கை முடக்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  

;