பாட்னா:
பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடனான கூட்டணியில் போட்டியிடப் போவது இல்லை என்று ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி அறிவித்துள்ளது.
பீகார் சட்டமன்றத்திற்கு மூன்ற கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ.க. கூட்டணி வைத்துபோட்டியிடுகிறது. மத்தியில் பாஜக கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் கட்சி மாநிலத்தில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் இல்லை என்று அறிவித்துள்ளது. பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடனான கூட்டணியில் போட்டியிடப் போவது இல்லை என்று ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்திகட்சி அறிவித்துள்ளது சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் போட்டியிட போவது இல்லை என லோக் ஜன சக்தியின் தேசிய பொதுச் செயலாளர் அப்துல் காலிக் அறிவித்துள்ளார். நிதிஷ் குமார் தலைமையின் கீழ் பீகார் தேர்தலை சந்திக்க வேண்டாம் என்றுலோக் ஜனசக்தி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.