தில்லி
கொரோனா ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி மத்திய பாஜக அரசு மக்களுக்கு எதிராக பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றியது.
முக்கியமாக விவசாயத்தை அளிக்கும் விதத்தில் இயற்றப்பட்டுள்ள வேளாண் சீர்திருத்த மசோதாவுக்கு இயற்றப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் டிராக்டரை எரித்து போராட்டம் செய்து வருகின்றனர். தற்பொழுது நாடு முழுவதும் போராட்டம் கிளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்நிலையில் இச்சட்டம் தொடர்பாக ஆலோசிக்க மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் தில்லியில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. தங்களது எதிர்ப்பு கருத்துகளை வெளிப்படுத்த விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிலையில், திடீரென அமைச்சர் கூட்டத்தை புறக்கணிப்பதாகவும், அவர் கூட்டத்தில் கலந்துக் கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் விவசாய சட்ட நகல்களைக் கிழித்தெறிந்து விட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.