tamilnadu

img

தில்லியில் இரண்டு வயது குழந்தை தவறான சிகிச்சையால் உயிரிழப்பு 

தில்லியில் தவறான சிகிச்சையால் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தில்லியின் சதாரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் 2 வயது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது.  இதையடுத்து அந்த பெண் மருந்து கடையில்
 மருந்து வாங்கி கொடுத்துள்ளார். ஆனாலும் குழந்தையின்  உடல்நலம் சரியாகவில்லை. இதனால் மீண்டும் மருந்து கடைக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து அங்கு குழந்தைக்கு காய்ச்சல் குணமாக கடந்த வியாழக்கிழமை ஊசி போட்டுள்ளார். அதன் பின்னர்  வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அக்குழந்தை ரத்த வாந்தி எடுத்துள்ளது. பதறிப்போன தாய் குழந்தையை அருகிலிருந்த மருத்துவமனைக்கு  கொண்டு சென்றுள்ளார். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
‘இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.