tamilnadu

img

மண்டல விரிவான பொருளாதார ஒப்பந்தத்தில் இந்தியா கையெழத்திடாதது அகில இந்திய விவசாயிகள் சங்கத்திற்குக் கிடைத்த வெற்றி

மண்டல விரிவான பொருளாதார ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாதது, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே மற்றும் பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

மிகப் பெரிய அளவிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாக (mega Free Trade Agreement) இருக்கக்கூடிய, மண்டல விரிவான பொருளாதார ஒப்பந்தம் (RCEP-Regional Comprehensive Economic Partnership) தொடர்பாக, ஆசியன் (ASEAN), சீனா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா. ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் முடிவுற்று,  கையெழுத்துவாதற்காகக் கடைசிநிமிடப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன.  இதில் கடைசி நிமிடத்தில் நவம்பர் 4ஆம் தேதியன்று இந்தியா கையெழுத்திடாமல் ஒதுங்கிக் கொண்டிருப்பது, நாட்டின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நாடு முழுதும் மேற்கொண்ட போராட்டங்களுக்குக் கிடைத்தக் குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.

இந்த ஒப்பந்த்த்தில் இந்தியா கையெழுத்திடுவதற்கு எதிராக நாடு முழுதும் அகில இந்திய விவசாயிகள் சங்கம், இதர அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், சிஐடியு, அகில இந்திய அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு  ஆகியவற்றுடன் இணைந்து மிகவும் பிரம்மாண்டமான அளவில் பிரதமரின் கொடும்பாவியை எரித்தும் மற்றும் பல்வேபறு வடிவங்களிலும்  எதிர்ப்புக் கிளர்ச்சிகள் நடத்தியது. பால் பண்ணை விவசாயிகள் தங்கள் மாடுகளை தாங்கள் வாழும் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கே இழுத்துச் சென்று தங்கள் எதிர்ப்புகளைக் காட்டினார்கள்.  இவ்வாறு விவசாயிகள், தொழிலாளர்கள் நாடு முழுதும் கிளர்ந்தெழுந்து கையெழுத்திடுவதற்கான ஒதுங்கப்பட்டிருந்த அதே நாளில்  பிரம்மாண்டமான முறையில் போராட்டங்கள் நடத்தியதும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவிற்கு பின்னடைவுகள் ஏற்பட்டிருப்பதும், அரசை பின்வாங்க வைத்திருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று பிரதமர் மோடி பல நாட்டின் தலைவர்களிடம் நவம்பர் 4ஆம் தேதிக்கு முன்னதாக கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தவர்தான்.  அதன்மூலம் இந்தியாவின் சந்தையை அந்நிய நாடுகளுக்கு தாரை வார்த்திட முயற்சிகள் மேற்கொண்டிருந்தவர்தான்.

இந்த ஒப்பந்த்த்தில் கையெழுத்திடுவதற்கு முன், அதனால் ஏற்படும் தாக்கம் குறித்து அரசு ஒரு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்திட வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோரி வருகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும். மாநிலங்களின் கருத்துக்களையும் கேட்டறிந்திட வேண்டும். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

மண்டல விரிவான பொருளாதார ஒப்பந்தத்தில் கண்டுள்ள வாசகங்கள், இந்தியாவின் இறுதி முடிவு இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் மீது திருப்திகரமான தீர்மானம் நிறைவேற்றப்படுவதைச் சார்ந்திருக்கிறது என்று தெளிவாக்க் குறிப்பிடுகிறது. பிரதமர் மோடிக்கு நாட்டு மக்களின் நலன்களை விட நாட்டிலுள்ள கார்ப்பரேட்டுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் நலன்கள்தான் முக்கியம் என்பதை அனைவரும் அறிந்ததேயாகும். பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசாங்கத்தின் கடந்த கால வரலாறு அவர்கள் தங்கள் உறுதிமொழிகளுக்குத் துரோகம் இழைக்கத் தயங்கமாட்டார்கள் என்பதேயாகும். எனவே இதில் கையெழுத்திடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபடுவார்கள். எனவே இந்த ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மக்களும் விழிப்புடன் இருந்திட வேண்டும் என்றும், இந்த ஒப்பந்தத்தின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத அம்சங்களையும், இந்த ஒப்பந்தம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கானவை என்பதையும் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றிட தொடர் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

(ந.நி.

;