tamilnadu

img

தேசிய அணைகள் பாதுகாப்பு சட்டமசோதா மாநிலங்களின் உரிமைகளில் கைவைப்பதாகும்

புதுதில்லி, ஆக.3- தேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட முன்வடிவு மாநில அரசுகளின் உரிமை களில் கைவைப்பதாகும் என்றும் மத்திய அரசு இதனைக் கைவிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கூறினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. வெள்ளி யன்று மாலை மக்களவையில் தேசிய அணைகள் பாதுகாப்பு சட்டமுன்வடி வின் மீதான விவாதத்தில் பங்கேற்று பி.ஆர். நடராஜன் பேசியதாவது: தேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட முன்வடிவு முற்றிலும் மாநில அர சாங்கங்களின் அதிகாரங்களை, உரி மைகளைப் பறிக்கக்கூடிய ஒரு சட்ட முன்வடிவாகும். எந்த மாநிலத்திலும் எந்த அணையையும் கட்டுவதற்கும் நிதி உதவி செய்யாமலும், அவற்றைப் பரா மரிப்பதற்கும் எவ்வித நிதி உதவியும் செய்யாமலும், வழக்கு நடத்துவதற்கும் எவ்வித நிதி உதவியும் செய்யாமலும், மத்திய அரசே நேரடியாக ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் முற்றிலும் தன் அதிகாரத்தின்கீழ் அவற்றின் பாதுகாப்பைக் கொண்டுவருவது என்பது நியாயமற்றது என்று நான் கருதுகிறேன்.

மாநில வாரியங்களிலும் மத்திய அரசு பிரதிநிதிகளா?

அதுமட்டுமல்லாமல், ஒரு மாநி லத்திற்கான அணை பிற மாநிலங்களின் இடங்களிலும் கட்டப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் இது போன்று நான்கு அணைகள் பரா மரிக்கப்படுகின்றன. ஆனால் இந்த அணைகள் தொடர்பாக மாநில அர சாங்கங்களிடம் எந்தவிதமான ஆலோ சனையும் பெறாமல் அந்த அணைகளின் பாதுகாப்பை மத்திய அரசு ஏற்றுக் கொள் வது என்பதும் மாநிலங்களில் அமைக் கப்படக்கூடிய வாரியத்திற்குக்கூட மத்திய அரசு சார்பில் இரண்டு உறுப்பி னர்கள் இருப்பார்கள் என்று சொல்வ தும் மாநில அரசாங்கத்தின் உரிமை யில் தலையிடுவதேயாகும்.

மடைமாற்றும் தந்திரம்

இதன் பின்னே இந்த அரசாங்கத்தின் மறைபொருளாக இருப்பது, இந்தத் தண்ணீரைப் பன்னாட்டு கம்பெனி களுக்கு மடைமாற்றிக் கொடுக்கிற தந்திரம் இருப்பதாகவே நான் பார்க்கி றேன். என்னுடைய தொகுதியாக இருக்கக் கூடிய கோயம்புத்தூரில் குடிநீர் விநி யோக உரிமை சூயஸ் பன்னாட்டு நிறு வனத்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. திருப்பூரிலும் குடிநீர் உரிமை பன் னாட்டு நிறுவனத்திடம் கொடுக்கப் பட்டுள்ளது. இதுபோன்று ஒரு மிகப் பெரிய ஆபத்தை நோக்கி நகர்வதற்கு இந்த சட்டமுன்வடிவு வழிவகுக்கக்கூடி யதாக இருக்கிறது.

அதிகார வரம்புமீறல்

மேலும் இந்தச் சட்டத்தை எதிர்த்து தனிநபர் எவருமோ அல்லது சமூக ஆர்வலர்கள் எவருமோ வழக்கு தொடுக்க முடியாது என்பதும் ஓர் ஆணையத்தால் மட்டுமே வழக்கு தொடுக்க முடியும் என்பதும் அதிகார வரம்பு மீறல் என்றே நான் பார்க்கிறேன். மாநில அரசாங்கங்கள் முழுவதும் நகராட்சிகள் மட்டத்திற்கு இறங்கக் கூடிய விதத்திலேயே அனைத்துச் சட்ட முன்வடிவுகளும் கொண்டுவரப் பட்டி ருக்கின்றன. நிலத்தடி நீர் மேலாண்மை சட்டமாக இருந்தாலும் சரி, நீர்வழிப் பாதை சட்டமாக இருந்தாலும் சரி, இவை அனைத்தும் மாநில அரசாங்கங் களின் உரிமைகளைப் பறிக்கக்கூடிய தாகும். எனவே இந்தச் சட்டமுன்வடி வை முற்றிலும் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் பேசி னார்.                     (ந.நி.)