புதுதில்லி:
மலைப்பகுதியான இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் குளிர்காலங்களில் சாலைப்போக்குவரத்து மிகவும் சிரமமானதாக உள்ளது.குளிர் காலங்களில் கடும்பனிப்பொழிவால் இமாச்சலப்பிரதேசத்தின் எல்லைப்பகுதி மற்றும் லடாக் இடையேயான இணைப்பு ஒவ்வொரு ஆண்டும் 6 மாதங்களுக்கு துண்டிக்கப்படுகிறது.இதற்காக மணாலியிலிருந்து லஹால்-ஸ்பிட்டி பள்ளத்தாக்கு வரை 9 கிலோமீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலை சுரங்கப் பாதை அமைக்க 2002 ஆம் ஆண்டு மே மாதம் அடிக்கல் நாட் டப்பட்டது. மோசமான வானிலை உள்ளிட்ட கடும்சவால்களுக்கு மத்தியில் சுரங்கத்தை அமைக்கும் பணியை எல்லை சாலைகள் அமைப்பு முடித்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில்அமைந்துள்ள இந்த, உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை திறப்பு விழா அக்டோபர் 3 அன்று நடைபெற்றது. ரோஹ்தாங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அடல் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.