தேசியக் குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்திடும் முதலமைச்சர்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்
புதுதில்லி, டிச. 24- தேசியக் குடிமக்கள் பதிவேட்டிற் குத் தங்கள் எதிர்ப்பினை அறி வித்துள்ள முதலமைச்சர்கள், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கான பணிகளையும் நிறுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசி யல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதா வது: மத்திய அமைச்சரவை செவ்வா யன்று, தேசிய மக்கள்தொகைப் பதி வேட்டை மேம்படுத்திடத் தீர்மானித்து, அதற்காக சுமார் 8,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறது. இப்போது தொடங்கப்படவிருக்கும் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுப் பணி, மக்களிடமிருந்து அவர்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றுடன் மேலும் 21 கூடுதலான விவரங்களை அளித்திட வேண்டும் என்று கோரி யிருக்கிறது. இவ்வாறு அதில் கோரப் பட்டிருக்கிற தரவுகளில் பெரும்பாலா னவை சென்ற முறை 2010இல் மேற் கொள்ளப்பட்ட பதிவேட்டின்போது தொகுக்கப்படவில்லை.
1955ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் திருத்தத்தின் மூலமும், வாஜ்பாய் அரசாங்கத்தால் 2003 டிசம்பர் 10 அன்று அறிவிக்கப்பட்ட விதிகளின் மூலமும், தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் அடிப்படை யில்தான் தேசியக் குடிமக்கள் பதி வேடு தயாரிக்கப்படுகிறது. எனவே, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்பது தேசியக் குடிமக்கள் பதி வேட்டை அமல்படுத்துவதற்கான பணியின் முதற்கட்டம் என்பது தெளி வாகிறது. இவ்விரண்டுக்கும் இடையிலான இணைப்பு மோடி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனேயே, 2014 ஜூலை 23 அன்றே (மாநிலங்களவை யில் நட்சத்திரக் குறியிட்ட கேள்வி எண் 229க்கு) மத்திய உள்துறை இணை அமைச்சர் அளித்திட்ட பதி லில் தெளிவாக்கப்பட்டுவிட்டது. அப் போது அவர் அளித்த எழுத்துப்பூர்வ மான பதில் வருமாறு:
“அரசாங்கம், இப்போது தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுத்திட் டத்தின்கீழ் நாட்டில் அனைத்துத் தனி நபர்களிடமிருந்தும் குடியுரிமை அந்தஸ்து சரிபார்ப்பதன் மூலம் தொகுக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் இந்தியக் குடிமக்க ளுக்கான தேசியப் பதிவேடு உரு வாக்கத் தீர்மானித்திருக்கிறது.” (“The Government has now decided to create the National Register of Indian Citizens (NRIC) based on the information collected under the scheme of NPR by verifying the citizenship status of all individuals in the country.”)
பிரதமர் மோடி அவிழ்த்துவிட்ட சரடுகள் எப்படியிருந்தபோதிலும், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேட்டிற் கான அடித்தளமாக அமைந்திடும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரி கிறது. தங்கள் மாநிலங்களில் தேசியக் குடிமக்கள் பதிவேட்டை அமல் படுத்த மாட்டோம் என்று குறைந்த பட்சம் 12 முதலமைச்சர்கள் அறி வித்திருக்கிறார்கள். கேரள மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர்கள் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுப் பணியையும் தொடரப்போவதில்லை என்று தீர்மானித்திருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு, தேசி யக் குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்திடும் அனைத்து முதலமைச்சர் களும், தங்கள் மாநிலங்களில் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுப் பணி களையும் கைவிடுவதை உத்தரவா தப்படுத்திட வேண்டும் என்று கேட் டுக்கொள்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக் குழு அறிக்கையில் கோரியுள்ளது. (ந.நி.)