கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக ஐபிஎல் தொடர் இடியாப்ப சிக்கலில் உள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் என்பதால் ஐபிஎல் தொடரைக் காண ரசிகர்கள் அதிகளவில் திரள்வார்கள். இதனால் கொரோனா வைரஸ் எளிதாகப் பரவிவிடும். ஏற்கெனவே மராட்டிய அரசு கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரைத் தள்ளி வைக்க வலியுறுத்திருந்த நிலையில், தற்போது கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவும் அதே கருத்தை வலி யுறுத்தி உள்ளார்.
இதனால் ஐபிஎல் தொடரை தள்ளி வைத்து மாற்றுத் தேதியில் நடத்த லாம் என பிசிசிஐ தரப்பில் விவாதிக்கப்படுவ தாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் இதுகுறித்து பதில் அளிக்க மறுத்துவிட்டார். இணைய வளர்ச்சியால் ஐபிஎல் போட்டியை ஸ்மார்ட் போனில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதால் ரசிகர்களே இல்லாமல் போட்டியை நடத்தலாமா? என்ற ஆலோசனையும் நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்கள் இல்லாமல்போட்டியை நடத்துவது உகந்தது இல்லை என மற்ற நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே ஐபிஎல் தொடர் குறித்து ஓரிரு நாட்களில் பிசிசிஐ தனது முடிவைத் தெரிவிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.