tamilnadu

img

சுங்கச் சாவடி கட்டண உயர்வு: கொந்தளிக்கும் பயணிகள்

சென்னை, செப். 3 - தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு  கட்டுப்பாட்டில் தேசிய நெடுஞ்சாலை களில் 400க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடி கள் இயங்கி வருகின்றன. தமிழ கத்தில் 40க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில், பெரும் பாலான சுங்கச்சாவடிகள் 1992ல் அமைக்கப்பட்டவை. மேலும் 2008ல்  சில சுங்கச்சாவடிகள் உருவாக்கப் பட்டன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் உத்தரவுப்படி, ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் ‘மாற்றி’ அமைக்கப்பட்டு வருகிறது.

1992ல் அமைக்கப்பட்ட சுங்கச் சாவடி களில் ஏப்ரல் மாதமும், 2008ல் ஏற்படுத்த ப்பட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம் பர் மாதமும் சுங்கக்கட்டணங் கள் உயர்த்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தரமான சாலை வேண்டும் என்றால் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரி வித்திருந்தார். சுங்கக் கட்டணம் அதி களவு வசூலிக்கப்படுவது தொடர்பாக திமுக எம்.பி.க்கள் ஜூலை 19ஆம் தேதி கட்காரியைச் சந்தித்து புகார் கூறினர். எனினும், தமிழகத்தில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு இருந்து வந்த நிலையில், 2008ல் அமைக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதன்படி, பாளையம் (கிரு‌‌ஷ்ண கிரி-தோப்பூர் சாலை), நல்லூர் (சென்னை-தடா), வைகுந்தம் (சேலம் - குமாரபாளையம்), எலியார்பத்தி (மதுரை-தூத்துக்குடி), கொடைரோடு (திண்டுக்கல்-சமயநல்லூர்), மேட்டுப்பட்டி (சேலம்-உளுந்தூர் ர்பேட்டை), மண்வாசி (திருச்சி-கரூர்), விக்கிரவாண்டி (திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை), பொன்னம் பலப்பட்டி (திருச்சி-திண்டுக்கல்), நத்தக்கரை (சேலம்-உளுந்தூர் பேட்டை), புதூர் பாண்டிய புரம் (தூத்துக்குடி-மதுரை), திருமாந்துறை (உளுந்தூர்பேட்டை-பாடலூர்), வாழவந்தான் கோட்டை (திருச்சி-தஞ்சை), வீரசோழபுரம் (சேலம்-உளுந்தூர்பேட்டை), விஜயமங்கலம் (குமாரபாளையம்-செங்கம்பள்ளி) ஆகிய 15சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தின்படி 5 முதல் 15 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் செலுத்தும் நிலை தற்போது உள்ளது.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில், கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு வழி பயணத்துக்கான கட்டணம் 5 ரூபாய் உயர்த்தப்பட்டு 80 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. பலமுறை கட்ட ணமாக 125 ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது. இலகுரக வாகனங் களுக்கு ஒரு வழி பயணமாக ரூ.145 ஆகவும், பலமுறை கட்டண மாக 215 ரூபாயாகவும் அதிகரிக்கப் பட்டுள்ளது. சரக்கு வாகனங்கள், பேருந்துகளுக்கான கட்டணம், ஒரு வழிப் பயணத்துக்கு 285 ரூபாயாகவும், பலமுறைப் பயணத்துக்கு 430 ரூபாயாகவும் சுங்கக் கட்டணம் உயர்த்த பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கான ஒருவழிப் பயணத்துக்கு 460 ரூபாயும், பலமுறை பயணத்துக்கு 690 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லாரி உரிமையாளர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘தமிழகத்தில் இருக்கக் கூடிய சுங்கச்சாவடிகளில் பெரும்பாலானவை காலாவதி ஆகி விட்டன. அடிப்படை வசதிகள் கூட சாலைகளில் ஏற்படுத்தித் தருவ தில்லை. எனினும் சுங்கக் கட்டணம் மட்டும் உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு வரிச் சுமை அதிகரித்துள்ளது” என்று  லாரி உரிமையாளர்கள் சங்க வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.