tamilnadu

img

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது- சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் மக்களைவை பேசியதாவது:-

இந்த  மதோதாவில் எனது கருத்துக்களை முன் வைப்பதற்கு முன் முதலில் தமிழகத்திற்கு ரயில்வே பட்ஜெட்டிலே இழைக்கப்பட்டிருக்கிற அநீதியை எனது கண்டனங்களை  முதலில் பதிவு செய்து கொள்கிறேன். ஏனென்றால் கடந்த 2006ம் ஆண்டு முதல் மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சுமார் 10 திட்டங்கள் . புதிய வழித்தடங்கள் 10 வழித்தடங்கள் அவற்றிக்கான தேவை ரூரூ 12 ஆயிரம் கோடி. ஆனால் இந்த பட்ஜெட்டில் 10 திட்டங்களுக்கு தலா ஆயிரம் வீதம் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருக்கிறீர்கள்.. எனவே அமைச்சர் அவர்கள் இந்த மன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டும. நீங்கள் இந்த 10 திட்டங்களையும் கைவிடப்போகிறீர்களா.. அல்லது நடத்தப் போகிறீர்களா..இந்த 10 திட்டங்கள்  தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு, மக்கள் வளர்ச்சிக்கு, மக்களின் மேம்பாட்டிற்கு மிக அடிப்படையான திட்டங்கள். எனவேதான் மக்களின் பிரதிநிதிகள் மூலம் இந்த அவையிலே  முன் வைக்கப்பட்டு மத்திய பட்ஜெட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்ட திட்டங்கள். இந்த திட்டங்களின் நிலை என்ன என்று நம்முடைய  அமைச்சர் அவர்கள்  தெளிவு படுத்த வேண்டும். அதே போல் இதுவரை தமிழக்ததில் நடந்து கொண்டிருக்கும் ரயில்வே  திட்டங்களுக்கு தேவையான நீதி ரூ 22 ஆயிரம் கோடி. ஆனால் இப்பொழுது நீங்கள் ஒதுக்கியிருப்பது 1800 கோடி மட்டுமே. அதாவது வெறும் 5 சதவிகித நிதி மட்டுமே ஒதுக்கியிருக்கிறீர்கள் , அப்படியென்றால் இப்போது தமிழக்ததில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ரயில்வே திட்டங்கள் முடிவடைய சுமார் 2 தலைமுறை ஆகும். இதைத்தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா..?  என்ற கேள்வியையும் நான் கேட்க விரும்புகிறேன்.
அதே போல் தமிழத்திற்கு புதிதாக காட்பாடி to விழுப்புரம், சேலம்- கரூர் -திண்டுக்கல், ஈரோடு - கரூர் ஆகிய 3 திட்டங்களுக்கு 389 கி.மீட்டர் ரூ 3851 கோடிஇரட்டை வழிப்பாதைக்கான புதிய திட்டம் இந்த பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அவற்றை நான் வரவேற்கிறேன்.
 ஆனால் இந்த திட்டங்களுக்கு நீங்கள் ஒதுக்கியிருக்கிற தொகை தலா ஆயிரம் வீதம்  ரூ 3000 மட்டுமே.  இது புதிய வழித்தடமல்ல. இரட்டை வழித்தடம்.  எனவே நிலம் கையகப்படுத்தும் பிரச்சனையும் இதில் இல்லை. அப்படியென்றால் வெறும் ரூ 3000 மட்டும் ஏன் ஒதுக்கியிருக்கிறீர்கள்.  பெயரளவிற்கு கண்துடைப்பிற்காக திட்டத்தை அறிவிக்கிற நோக்கம் இதில் இருக்கிறதா என்ற கேள்வியை இந்த மன்றத்தில் எழுப்ப விரும்புகிறேன். 
அதேபோல் மதுரை கன்னியாகுமரி இந்த இரட்டை வழி பாதைக்கும், இந்தாண்டும்  நீங்கள் ஒதுக்கியிருப்பதை சேர்த்து 60 சதவிகிதம்தான் ஒதுக்கியிருக்கிறீர்கள். மீதம் 40 சதகிகிதத்தை எப்போது ஒதுக்கபோகிறீர்கள் என்ற கேள்வியையும் இங்கே எழுப்பவிரும்புகிறேன்.
அதே போல் தனியார் மயம் என்பது மிக மோசமாக ரயில்வே துறையில் ஏறக்குறைய அடுத்த 5 ஆண்டுகளில் 500 பயணிகள் ரயில் தனியார் மயமாக்கப்படும். இப்போழுது 150 ரயில்கள் 100 வழித்தடங்கள் என்று அறிவித்திருக்கிறீர்கள். இது மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும். 
 இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் கிஷான் எக்ஸ்பிரஸ் நிதி அமைச்சர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார். விவசாயிகளின் விளை பொருட்களை உற்பத்தி பொருட்களை சந்தைக்கு கொண்டு வர கிஷான் எக்ஸ்பிரஸ் என்று குறிப்பிட்டார். அவற்றையும் நீங்கள் தனியாருக்கு அறிவித்திருக்கிறீர்கள். அப்படியென்றால் அரசசாங்கமே இந்த விவசாயிகளின் மீது அக்கறையில்லாத போது, எந்த தனியார் நிறுவனம் விவசாயிகள் மீது அக்கறை கொண்டு இந்த ரயிலை  லாபம் நோக்கம் இல்லாமல் அல்லது மிகப்பெரிய விவசாய நலனோடு ரயிலை இயக்கும் என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்.   
அதேபோல் பாதுகாப்பிற்கு மிக முக்கியமாக 4500 கி.மீட்டர் ஒவ்வொரு ஆண்டும் தண்டவாளங்கள் பழுதடைகிறது..  ஆனால் இப்பொழுது ஒதுக்கியிருக்கிற நிதி வெறும் 3500 கி.மீட்டருக்கு மட்டும் ஒதுக்கியிருக்கிறீர்கள்.  இது பாதுகாப்பை மிகப்பெரிய கேள்விக்கு உள்ளாக்குகிறது. அதே போல் மின் மயத்திற்கு 2022ல் நூறு சதவிகிதம் எலக்ரிக்கிபிக்சேசன்  மின்மயம் என அறி வித்திருக்கிறீர்கள்.. அப்படியென்றால் இந்தாண்டு 10 கி.மீட்டருக்கு நீங்கள் நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் இபொழுது ஒதுக்கப்பட்டிருப்பது  வெறும் 6 ஆயிரம் கி.மீட்டருக்கான நிதி மட்டுமே இப்பொழுது ஒதுக்கியிருக்கிறீர்கள் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். 
அதேபோல் தனியார் மயத்தின் மிக முக்கியமாக தென்க ரயில்வேயில் 11   ரயில்கள் தனியார்மயமாக்கப்பட்டிருக்கிறது. அதில் 6 ரயில்கள் சென்னை சென்ரல் ரயில் நிலையத்திலிருந்தும், 5 ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவித்திருக்கிறீர்கள். அதாவது தாம்பரத்தை முழுமையாக தனியார் மயத்தின் முனையமாக மாற்றும் முயற்சியிருக்கிறது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக் கிறோம். அதே போல கோவையில் இருந்து மங்களூருக்கு இயக்கப்படுகிற தேசஷ் ரயில் தனியார் விடுவதாக இப்பொழுது அறிவிப்பு வந்திருக்கிறது. இதுவும் மிக வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒன்று என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
 அதே போல் ஐசிஎப் உள்ளிட்ட 8 உற்பத்தி நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்படும் என்ற இந்த அறிவிப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்குகிற அறிவிப்பாக மொத்த ரயில்வேயையும் தனியாருக்கு தாரை வார்க்கும் அறிவிப்பாக இருககிறது. இவற்றை கைவிட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
-சு.வெங்கடேசன் எம்.பி